செய்திகள் :

Jammu kashmir: `சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஓர் நியாயமற்ற ஆவணம்’ - ஒமர் அப்துல்லா காட்டம்

post image

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு முடிவு செய்தது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

சிந்து நதி
சிந்து நதி

அதே நேரம் ஜம்மு காஷ்மீரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பல்வேறு சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் நேற்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்தித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், `` இந்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை, அனைத்து நடவடிக்கைகளும் நேர்மையாக இருக்கட்டும்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகவும் நியாயமற்ற ஆவணம் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஆனால், இப்போது மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவால் ஏற்படவிருக்கும் நீண்ட கால தாக்கங்கள் என்ன என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய் பயணித்த வாகன கதவு சேதம்; தொண்டர்கள் கொந்தளிப்பு - தவெக பூத் கமிட்டி கூட்ட அப்டேட்ஸ்

கோவையில் நடிகர் விஜய் பயணித்த கேரவன் கதவுகளை ரசிகர்கள் முண்டியடித்து நெருங்கும் முயற்சியில் சேதமானதால், தவெக பூத் கமிட்டி மாநாட்டுத் திடலுக்கு செல்ல மாற்று வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர்.கோவை வந்த விஜய்... மேலும் பார்க்க

Virginia Giuffre: இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை புகார் - குற்றச்சாட்டு கூறியப் பெண் விபரீத முடிவு

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய வர்ஜீனியா கியூஃப்ரே (Virginia Giuffre) என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்... மேலும் பார்க்க

சேலம் வெடி விபத்து: 'முறையானப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதில்லை' - திமுக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

சேலம் ஓமலூர் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவுக்காகப் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டபோது எதிர்பாராத விதமாக பாட்டாசு வெடித்துச் சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்... மேலும் பார்க்க

Bihar : அப்செட்டில் நிதிஷ்; வேகமெடுக்கும் தேஜஸ்வி - பரபர பீகார் தேர்தல்!

பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இங்கு 13 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். 8 கோடி வாக்காளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் சொல்கிறது. இங்குதான் இந்த ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த ரகுபதி - ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி 2023-ம் ஆண்டு ஜூன் 14-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக, ... மேலும் பார்க்க