செய்திகள் :

Kerala: சுரேஷ்கோபி நடித்த சினிமா டைட்டில் மாற்றம்.. முடிவுக்கு வந்த சர்ச்சை; பட ரிலீஸ் எப்போது?

post image

பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ்கோபி கதாநாயகனாக நடித்துள்ள சினிமா ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா. ஜே.எஸ்.கே என சுருக்கமாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த சினிமாவில் அனுபமா பரமேஸ்வரன், `ஜானகி' என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நீதிமன்றத்தில் அனல்பறக்கும் வாதங்களுடன் கூடிய திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த சினிமாவில் சுரேஷ்கோபி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கதாநாயகிக்கு நீதிபெற்றுக்கொடுக்கும் விதமாக சினிமாவின் கதை அமைந்துள்ளது. யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த சினிமா கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜானகி என்பது பெண் தெய்வமான சீதாவின் மற்றொரு பெயர் எனவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணின் பெயர் ஜானகி என இருப்பது சரியல்ல எனவும் சென்சார் போர்டு கருத்து தெரிவித்திருந்தது.

மேலும், சினிமா டைட்டிலிலும், கதாநாயகியின் கதாபாத்திரத்திரமாக ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும் என சென்சார்போர்டு கூறியிருந்தது. அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருந்தது.

சினிமாவில் அனுபமா பரமேஸ்வரன்

இதற்கிடையே ஜே.எஸ்.கே சினிமாவை வெளியிட அனுமதிக்க வேண்டும் என படக்குழுவினர் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையின்போது ரிவியூ கமிட்டி சினிமாவை பார்க்க உள்ளதாக சென்சார்போர்டு தெரிவித்திருந்தது.

ரிவியூ கமிட்டி சினிமாவை முழுமையாக பார்த்த பிறகும் ஜானகி என்ற பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்தது. பின்னர் நீதிபதிகள் சினிமாவை பார்த்தனர். ஐகோர்ட்டில் நேற்று காலை நடைபெற்ற விசாரணையின்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜானகி என்ற பெயரை மாற்றுவதில் சிரமம் உள்ளதாகவும். டீசர் உள்ளிட்ட அனைத்திலும் ஜானகி என வெளியிடப்பட்டுவிட்டதாகவும். இனி பெயரை மாற்றினால் பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படும் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பத்மாவத், பில்லு பி உள்ளிட்ட சினிமாக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்சார்போர்டு கோர்ட்டில் தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட், பெயரிடுவதற்கு கலைத்துறையினருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது அல்லவா. எனவே, ஜானகி என்ற பெயர் வரும்போது, இது சரித்திர கதாபாத்திரத்துக்கும் சம்பந்தம் இல்லை என எழுத்துவடிவில் காண்பித்தால் போதாதா. ஏற்கெனவே பட்டாளம் ஜானகி என்ற மலையாள சினிமா முன்பு வெளிவந்துள்ளது எனவும் கோர்ட் தெரிவித்தது. சினிமா கதாபாத்திரத்தின் முழிபெயரான ஜானகி வித்யாதரன் என்றோ, ஜானகி வி என்றோ அல்லது வி ஜானகி என்றோ மாற்ற வேண்டும் என சென்சார்போர்டு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதையடுத்து சினிமா பெயரை ஜானகி வி vs ஸ்டேட் ஆஃப் கேரளா எனவும், கதாபாத்திரத்தின் பெயரை வி ஜானகி எனவும் மாற்றுவதாகவும், சினிமா தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்ட அடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

ஜே.எஸ்.கே சினிமாவில் சுரேஷ்கோபி

இதுபற்றி இயக்குநர் பிரவீன் நாராயணன் கூறுகையில், "சினிமா குறித்த விவாதம் முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்ற வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட சினிமா பதிப்பை விரைந்து சென்சார் போர்டுக்கு அனுப்பி வைப்போம். இரண்டு இடங்களில் மியூட் செய்யவேண்டும் என சென்சார்போர்டு தெரிவித்துள்ளது. அதில் சற்று வருத்தம்தான். சில காட்சிகளை நீக்க வேண்டும் என முதலில் கூறினார்கள். அந்த காட்சிகள் இந்த சினிமாவுக்கு மிகவும் முக்கியமானவை என்பதால் மாற்றமுடியாது என நாங்கள் உறுதியாக தெரிவித்தோம். அதற்கு தயாரிப்பாளர்களும் எங்களுடன் உறுதியாக இருந்தனர். வரும் 18-ம் தேதி சினிமாவை ரிலீஸ் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

Tat2: ரீல்ஸ் டு வெள்ளித்திரை; 'டாட்டூ' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் இன்ஃப்ளூயன்ஸர் சதீஷ்

சமூக ஊடகங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்ஸரான சதீஷ், ‘டாட்டூ’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் தனது மனைவி தீபாவுடன் ... மேலும் பார்க்க

மீண்டும் சீரியலில் ஸ்மிருதி இரானி: `ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளமா?' - வெளியான தகவல்!

பா.ஜ.க தலைமையிலான அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும், தொழில், ஜவுளி துறை அமைச்சருமாக இருந்தவர் ஸ்மிருதி இரானி. அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து ஊடகங்களில் விவாதப... மேலும் பார்க்க

'ஏங்க நான் சாப்பிட வரலைங்க’ திருச்செந்தூரில் போலீஸுடன் பிரச்னையா? - விள‌க்கும் பாடகர் வேல்முருகன்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தேறியது. லட்சக் கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து வருகின்றனர்.இ... மேலும் பார்க்க

Ooty : 75 ரகங்களில் 2 லட்சம் மலர் நாற்றுகள்; 2 -ம் சீசனுக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா!

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்திருக்கிறது. ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் சென்ற நிலையில், தற்போதும் சுற்றுல... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 10: சோகமான கேரக்டர்கள்ல தான் நடிப்பேனா; எனக்கு கிளாமர் வராதா? - நடிகை ஷோபா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, தன்னோட நடிப்பால அசர வெச்ச, பல சீனியர் ஆர்ட்டிஸ்ட்களாலும் 'மகளே', 'மோளே'ன்னு கொண்டாடப்பட்ட நடிகை... மேலும் பார்க்க

தோழியை திருமணம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட நடிகை - உண்மை வெளிப்பட்டதால் கண்டித்த ரசிகர்கள்!

மலையாள சின்னத்திரையில் 'கூடெவிடே' என்ற சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரார்த்தனா. இவரது தோழி ஆன்ஸி. ஆன்ஸி மாடலாக உள்ளார். சில நாட்களுக்கு முன் நடிகை பிரார்த்தனாவும், ஆன்ஸியும் ஒரு கோயிலில் வைத்து ... மேலும் பார்க்க