செய்திகள் :

மீண்டும் சீரியலில் ஸ்மிருதி இரானி: `ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளமா?' - வெளியான தகவல்!

post image

பா.ஜ.க தலைமையிலான அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும், தொழில், ஜவுளி துறை அமைச்சருமாக இருந்தவர் ஸ்மிருதி இரானி. அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து ஊடகங்களில் விவாதப்பொருளாகுவார். 2019-ம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தியையே தோற்கடித்து மத்திய அமைச்சரான அவர், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதே அமேதி தொகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

ஸ்மிருதி இரானி - Smriti Irani

அதற்குப்பிறகு ஸ்மிருதி இரானி அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில், பிரபல இந்தி சீரியல் இயக்குநரான ஏக்தா கபூரின் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' என்ற தொடரின் இரண்டாம் சீசன் உருவாகிறது. இந்தத் தொடரின் முதல் சீசன் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது. இதில் ஸ்மிருதி இரானி நடித்த துளசி விராணி கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டிருக்கிறது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த சீரியலின் இரண்டாம் பாடம் தொடங்கவிருக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத் திரையில் தோன்றவிருக்கிறார். இந்த சீரியலின் முதல் சீசனில் நடித்த அனுபவம் குறித்து முன்னர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு ஸ்மிருது இரானி பேட்டியளித்திருக்கிறார். அதில், ``ஒப்பந்தத்தின்படி, எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.1200-1300 சம்பளம் கொடுப்பார்கள். அந்த நேரத்தில், நான் மெக்டொனால்டுகளில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்தேன்.

மீண்டும் சீரியலில் நடிக்கும் ஸ்மிருதி இராணி
மீண்டும் சீரியலில் நடிக்கும் ஸ்மிருதி இராணி

அங்கு எனக்கு மாதம் ரூ.1800 சம்பளம் கிடைத்தது. எனவே, ஒரு நாளைக்கு ரூ.1200 பெறுவது மிகவும் நல்ல விஷயமாக இருந்தது." எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் 150 எபிசோடுகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில், ஒரு எபிசோடில் நடிப்பதற்காக ஸ்மிருதி இரானிக்கு ரூ.14 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'ஏங்க நான் சாப்பிட வரலைங்க’ திருச்செந்தூரில் போலீஸுடன் பிரச்னையா? - விள‌க்கும் பாடகர் வேல்முருகன்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தேறியது. லட்சக் கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து வருகின்றனர்.இ... மேலும் பார்க்க

Ooty : 75 ரகங்களில் 2 லட்சம் மலர் நாற்றுகள்; 2 -ம் சீசனுக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா!

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்திருக்கிறது. ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் சென்ற நிலையில், தற்போதும் சுற்றுல... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 10: சோகமான கேரக்டர்கள்ல தான் நடிப்பேனா; எனக்கு கிளாமர் வராதா? - நடிகை ஷோபா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, தன்னோட நடிப்பால அசர வெச்ச, பல சீனியர் ஆர்ட்டிஸ்ட்களாலும் 'மகளே', 'மோளே'ன்னு கொண்டாடப்பட்ட நடிகை... மேலும் பார்க்க

தோழியை திருமணம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட நடிகை - உண்மை வெளிப்பட்டதால் கண்டித்த ரசிகர்கள்!

மலையாள சின்னத்திரையில் 'கூடெவிடே' என்ற சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரார்த்தனா. இவரது தோழி ஆன்ஸி. ஆன்ஸி மாடலாக உள்ளார். சில நாட்களுக்கு முன் நடிகை பிரார்த்தனாவும், ஆன்ஸியும் ஒரு கோயிலில் வைத்து ... மேலும் பார்க்க

``வாழ்நாள் முழுவதுமான சினிமாவின் முதல்படி..'' - நடிகையாகும் மகள் விஸ்மயாவுக்கு மோகன்லால் வாழ்த்து!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் சினிமாக்களில் நடித்துவருகிறார். அவரைத்தொடர்ந்து மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளார். விஸ்மயா தாய் தற்காப்... மேலும் பார்க்க

"கூமாபட்டியை விட்டுட்டு சென்னையில் தங்கப்போறேன்; ஏன்னா!" - வைரல் இளைஞர் தங்கபாண்டி பேட்டி

“ஏஏஏஏஏஏஏஏங்க.... தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்... ஒலகத்துலயே கிடையாது" என ஒன்மேன் ஆர்மியாய், கூமாபட்டியை வைரலாக்கிய இளைஞர் தங்கபாண்டி, 'இனி சென்னையில் வசிக்கப்போகிற... மேலும் பார்க்க