செய்திகள் :

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

post image

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது.

கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இளைஞர் சிஜூ-வை ஒருவர் கயிற்றால் கட்டி வைத்திருக்கும் வீடியோவில் பேசும் சிஜூ, கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு உள்ளதாக கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

சிஜூ-வை கயிற்றால் கட்டி பிடித்து வைத்திருந்தவர், இளைஞர் தன்னை கடித்ததாக கூறும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

அட்டபாடியில் கட்டி வைத்து தாக்கப்பட்ட இளைஞர் சிஜூ

பால் கொண்டு சென்ற பிக்கப் வாகனத்தின் குறுக்கே பாய்ந்ததுடன், வாகனத்தை கல்லால் எறிந்து உடைத்ததாக சிஜூ மீது பிக்கப் வாகன உரிமையாளரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதுபற்றி விசாரிக்க சிஜூ-வை அழைத்தபோது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கால் இடறி வாகனத்தின் முன்பு விழுந்த பட்டியலின இளைஞரை வேண்டும் என்றே கட்டி வைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 24-ம் தேதி சிஜூ கோட்டத்தறா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது மருத்துவமனையில் இருந்து போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

இப்போது வீடியோ வெளியானதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் பேசுபொருளானது.

அட்டப்பாடியில் மது என்ற பழங்குடியின இளைஞர் கடைகளில் உணவு திருடியதாக கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ கட்டி வைத்து தக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று சிஜூ-விடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்

சிஜூ அளித்த புகாரின் அடிப்படையில், அவரை தாக்கியதாக பால் வண்டி டிரைவர் சோலையூரைச் சேர்ந்த ரெஜி மேத்யூ(21), கிளீனர் ஆலப்புழாவைச் சேர்ந்த விஷ்ணுதாஸ்(31) ஆகியோரை அகளி போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் வைத்து அவர்களை கைது செய்த போலீஸார் மண்ணார்க்காடு பழங்குடியினர் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க

"குழந்தைகள் உடலில் சாத்தான்" - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42).இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிர... மேலும் பார்க்க

நெல்லை: கணவரின் நடத்தையில் சந்தேகம்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!

நெல்லை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவியிடையே கடந்த சில நாட்க... மேலும் பார்க்க