செய்திகள் :

KKR vs RCB: ``இந்த அணிக்கு வந்து 10 நாள்கள்தான் ஆகிறது; அதற்குள்..'' - ஆட்டநாயகன் குர்னல் பாண்டியா

post image

ஐபிஎல் 18-வது சீசன் நேற்று ( மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்(KKR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்(RCB) மோதின. இதில் கொல்கத்தா அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியின் இந்த வெற்றிக்கு குர்னல் பாண்டியா முக்கிய பங்காற்றி இருந்தார்.

 குர்னல் பாண்டியா
குர்னல் பாண்டியா

இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய குர்னல் பாண்டியா, "இன்றைய போட்டியில் அணியின் வெற்றிக்காக உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்சிபி அணிக்காக விளையாடுவது அபாரமாக இருக்கின்றது. ஆட்டம் செல்லும் திசை நோக்கி நாமும் செல்ல வேண்டும். இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்பு நாங்கள் விளையாடும் போது எங்களுடைய கவனத்தை நாங்கள் சுருக்கி கொண்டு பந்துவீச்சில் மட்டும்தான் முழு கவனத்தையும் வைத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து சிக்சர்களை அடிக்கும் வகையில் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை வளர்த்து வருகிறார்கள். எனவே பவுலர்களும் அதற்கு ஏற்ற மாதிரி தங்களுடையத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் தான் நான் பந்துகளின் வேகத்தை அதிகப்படுத்தினேன். நான் ஆர்சிபி அணிக்குள் வந்த உடனே இந்த அணிக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

 குர்னல் பாண்டியா
குர்னல் பாண்டியா

ரசிகர்கள் பெரும் அளவு எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நான் பெங்களூருவில் சாதாரண உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்தாலே அங்கு இருக்கும் ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி என்று கத்துவார்கள். நான் இந்த அணிக்கு வந்து பத்து நாள்கள் தான் ஆகிறது. அதற்குள் எனக்கு இந்த அணி மிகவும் பிடித்துவிட்டது" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Sanjiv Goenka: `ஏமாற்றம்தான், பரவாயில்லை' - தோல்விக்குப் பின் வீரர்களிடம் LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா

ஐபிஎல் பார்ப்பவர்களுக்கு சஞ்சீவ் கோயங்கா யார் என்று நிச்சயம் ஓரளவுக்காவது தெரிந்திருக்கும். 2016, 2017-ல் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் சஞ்சீவ் கோயங்கா.இவர், 2... மேலும் பார்க்க

LSG: லக்னோவுக்கு கேப்டன் ஆனாலே டக் அவுட் ஆவார்களா... அன்று கே.எல்.ராகுல் இன்று ரிஷப் பன்ட்!

ஐபிஎல்லில் கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ... மேலும் பார்க்க

ஸ்ரேயாஷ் ஐயர்: பஞ்சாப் அணியின் புது வரலாற்றை எழுதப்போகும் ஸ்ரேயாஷ்; எப்படித் தெரியுமா?

பஞ்சாப் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. 11 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான். பொதுவாகப் பார்த்தால் அத்தனை முக்கியமான வெற்றியெல்லாம் இல்லை. இன்னும் சீசன் இருக்கிறது. இன்னும் போட்டிகள் இர... மேலும் பார்க்க

'கோலியும், நானும் இப்போ கேப்டன் இல்ல, அதனால...' - விராட் கோலி குறித்து தோனி ஷேரிங்ஸ்

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார். தோனி"விராட் கோலியை பொறுத்தவரை அவர... மேலும் பார்க்க

DRS எடுக்காததால் பறிபோன வாய்ப்பு... இரண்டே நாளில் ரோஹித்தை முந்தி மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்

ஐபிஎல் நேற்றைய (மார்ச் 25) போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் அகமதாபாத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செ... மேலும் பார்க்க

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க