Kubera: `யாருக்கு தான் கடன் பிரச்னை இல்ல; ரூ.150 சம்பாதிச்சாலும் பிரச்னைதான், 1 கோடி..' - தனுஷ்
தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருகிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் இடையே, Rapid Fire கேள்விகளுக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர். அப்போது, தெலுங்கில் எந்த நடிகரை இயக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் தெலுங்கில் பவன் கல்யாணை இயக்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அம்மா குறித்து கேட்டப்போது பதிலளித்த தனுஷ், “பணம் இல்லாதபோதும் கிடைப்பது தாயின் அன்பு மட்டும்தான். அனைவருக்கும் தகுதிக்கேற்ற கடன் பிரச்சினை இருக்கிறது. ரூ.150 சம்பாதிக்கும்போது ரூ.200க்கு பிரச்னை வருகிறது.

அதேபோல் ரூ.1 கோடி சம்பாதிக்கும்போது ரூ.2 கோடிக்கு பிரச்னை வருகிறது. எனவே எல்லா இடத்திலும் பிரச்னை இருக்கிறது. EMI, லோன் என்று எல்லா பிரச்னையும் உண்டு. பிரச்னை இல்லாத இடமே இல்லை. நம்மிடம் காசு, பணம் இல்லை என்றாலும் நமக்குக் கிடைப்பது அம்மாவின் அன்பு மட்டும்தான்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...