செய்திகள் :

Life On Boat: வீடு, உடைமைகளை விற்று, பாய்மரப்படகில் குடியேறிய இந்திய குடும்பம்- கனவு நனவானது எப்படி?

post image

கப்பலில் தங்களது முழு நேர வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறது ஓர் இந்திய குடும்பம்.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான கேப்டன் கௌரவ் கௌதம் மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி மற்றும் இவர்களின் மகள் கயா ஆகியோர் 42 அடி நீளமுள்ள கப்பலில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

மிதக்கும் படகு தான் இவர்களது வீடு, இதில்தான் தங்களது அன்றாட வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.

இதற்காக தம்பதியினர் கிட்டத்தட்ட தங்கள் எல்லா உடைமைகளையும் விற்றுள்ளனர். தங்களது உடைமைகளை படகில் பயணிப்பதற்காகவே 6000 கிலோவிலிருந்து வெறும் 120 கிலோவாக குறைத்து இருக்கின்றனர்.

படகில் எந்தெந்த பொருள்கள் வைத்திருக்க முடியுமோ, அவற்றை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

வைதேகி மண்பாண்ட பொருள்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். ஆனால் இந்த படகில் தங்களது வாழ்க்கையை வாழ்வதற்காக அதனைக் கைவிட்டு உள்ளார்.

இது இவர்களின் நீண்ட கால கனவு என்று கூறுகின்றனர். நிதி கட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த கனவு கைகூடாமல் இருந்த நிலையில், கோவிட் காலத்தில் இந்த கனவு மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. ஏனெனில் உலக அளவில் படகு விலை அப்போது குறைந்து காணப்பட்டதால், இதனை இந்தக் குடும்பம் சாத்தியமாக்கியுள்ளது.

இவர்களின் மகன் கயா, தினமும் அன்றாட பள்ளிக்கு செல்லும் மற்ற மாணவர்களைப்போல் அல்லாமல்... வீட்டில் இருந்தே அவரின் கல்வியை தொடர்கிறார். பாட புத்தகங்களை தாண்டி, நிறைய பாடங்களை நேரடியாக கற்று கொள்கிறார்.

அவர் கடல்வாழ் உயிரினங்களை பற்றி நேரடியாக கற்றுக் கொள்கிறார். இந்தப் பயணங்களின்போது வெவ்வேறு கலாசாரங்களை அனுபவிக்கிறார். கயாவுக்கு விடுமுறை என்பது முடிவில்லாதது என்று கூறுகின்றனர், அவரது பெற்றோர்.

பாய்மரப் படகில் வாழ்வது அதன் சவால்களைக் கொண்டுள்ளது, புயல் நிறைந்த கடல்களில் பயணிப்பது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவர்களின் வாழ்க்கை முறையை `தி ரீவா ப்ராஜெக்ட்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.

Ghibli Art: 40 ஆண்டுகளாக இருக்கும் `ஜிப்லி ஆர்ட்' - திடீரென இணையவாசிகளிடம் டிரெண்டானது எப்படி?

சமூக வலைதளங்களில் தற்போது ஜிப்லி ஆர்ட் என்ற பெயரில் டிரண்டாகி வரும் அனிமேஷன் புகைப்படங்களை பார்த்திருப்போம். 1985லேயே இது போன்ற அனிமேஷன்கள் உருவாக்கப்பட்ட நிலையில், திடீரென இணையவாசிகள் மத்தியில் பிரபல... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவனை மாட்டிவிட்ட மனைவி

வாட்ஸ்ஆப்பில் பல தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கும் என்பதால் பலரும் அதற்கு லாக் போட்டு வைப்பது வழக்கம். வீட்டில் மனைவிமார்கள் தங்களது கணவனின் வாட்ஸ்ஆப்பை பார்க்க விரும்பினாலும் அதனை கணவன்மார்கள் பார்க்க அ... மேலும் பார்க்க

Madhapar: ரூ.7000 கோடி வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் குஜராத் கிராமம்; சுவாரஸ்ய பின்னணி!

ரூ.700 கோடி வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.குஜராத்தின் போர்பந்தர் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் மாதபர்.... மேலும் பார்க்க

சீனா: அவசர நேரத்தில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்; நெகிழ வைத்த நிகழ்வு!

தாய்க்கு எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்ட போது, துணிச்சலுடன் செயல்பட்டு பிரசவம் பார்த்து தனது தம்பி பூமிக்கு வர உதவியிருக்கிறார் 13 வயது சிறுவன். மருத்துவப் பணியாளர் மொபைலில் தொடர்பில் இருக்கும்ப... மேலும் பார்க்க

`இது கிராமமா கேன்சர் மண்டலமா?’ - அதிர்ச்சியில் ஆந்திர அரசு - விளக்கம் தரும் மருத்துவர்

இது கிராமமா அல்லது இந்தியாவின் புற்றுநோய் மண்டலமா என்று தகவல் தெரிந்த பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரம் என்கிற சிறு கிராமம். அப்படி ... மேலும் பார்க்க

தாய்ப்பால் சுவையில் ஐஸ் கிரீமை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் - நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தைப் ப... மேலும் பார்க்க