செய்திகள் :

Matt Deitke: 24 வயது AI ஆய்வாளர்: நேரில் சென்று பேசிய மார்க்; ரூ.2,000 கோடி சம்பளம் - யார் இவர்?

post image

ஏ.ஐ என்ற வார்த்தை, கொஞ்சம் கொஞ்சமாக உலகை ஆள தொடங்கியிருக்கிறது.

இப்போது நிறுவனங்களும் ஏ.ஐ நிபுணர்கள், ஏ.ஐ ஆய்வாளர்களை வேலைக்கு எடுக்க தொடங்கியிருக்கிறது. அதனால், ஏ.ஐ தெரிந்திருப்பர்வகளுக்கு இப்போது தனி மவுசு உண்டாகியிருக்கிறது என்றே கூறலாம்.

அப்படியான ஒரு ஏ.ஐ ஆய்வாளருக்காக, ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் மெட்டாவின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் இறங்கி வந்துள்ளார்.

யார் அவர்?

மாட் டெய்ட்கே
மாட் டெய்ட்கே

24 வயதான மாட் டெய்ட்கே தான் அந்த ஏ.ஐ ஆய்வாளர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் பி.எச்.டி படிப்பு படித்து கொண்டிருந்தார். ஆனால், ஏ.ஐ மீதிருக்கும் ஆர்வத்தால், பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு, ஏ.ஐ உலகிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆலன் ஏ.ஐ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்த நிறுவனத்தில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார்.

அங்கே மோல்மோ என்ற ஏ.ஐ ஆப் உருவாக்கத்தில் பங்காற்றி உள்ளார்.

பிறகு, பல்வேறு விஷயங்களை ஏ.ஐ துறையில் சாதித்துள்ளார்.

மெட்டாவின் ஆஃபர்

ஏ.ஐ தனக்கென தனி இடம் பிடித்த இவரை, மெட்டா நிறுவனம் 2024-ம் ஆண்டு, அவரை அணுகியுள்ளது.

மெட்டாவின் ஏ.ஐ ஆய்வகமான சூப்பர் இன்டெலிஜன்ஸ் லேப்பில் இவரைப் பணியமர்த்த, 'நான்கு ஆண்டுகளுக்கு 125 மில்லியன் டாலர் தருகிறோம்' என்று ஆஃபர் கொடுத்துள்ளது.

ஆனால், தனது கரியரின் ஆரம்பத்திலேயே இந்த ஆஃபரை ஒத்துக்கொண்டால், ஏ.ஐ-யில் தனக்கு வேண்டுகிற சோதனைகளைச் செய்து பார்க்க முடியாது என்று மறுத்திருக்கிறார்.

Matt Deitke
Matt Deitke

மீண்டும் கதவைத் தட்டிய மெட்டா

இந்த நிலையில், மீண்டும் இவரை மெட்டா நிறுவனம் அணுகியிருக்கிறது.

அப்போதும் இவர் மறுத்துள்ளார்.

அதன் பிறகு, மார்க் சக்கர்பெர்கே இவரை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது, இவரது சம்பளம் நான்கு ஆண்டுகளுக்கு 250 மில்லியன் டாலர் என்று இரட்டிப்பாக்கி பேசப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டிலேயே 100 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

250 மில்லியன் டாலர் என்பது கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, மாட் ஆஃபரை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆக, இவர் இப்போது மெட்டாவின் ஏ.ஐ பணியாளர்!

AI வேலைகளுக்குக் கோடிகளில் அள்ளித்தரும் ஆப்பிள் நிறுவனம்; என்னனென்ன வேலை, எவ்வளவு சம்பளம் தெரியுமா?

மெட்டா, ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை வேலையிருந்து தூக்கிவிட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த (AI) துறைகளில் அதிமானவர்களை பணியமர்த்துவதில் தீவிரம் காட்டி... மேலும் பார்க்க

உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?

கடந்த இரண்டு ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறைவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அ... மேலும் பார்க்க

AI-யின் தாக்கமா? 4 முறை வேலையை இழந்த மென்பொருள் பொறியாளர் - என்ன காரணம் கூறுகிறார்?

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 59 வயதான மார்க் க்ரிகுயர் என்பவர் 28 ஆண்டுகளாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளில் நான்கு முறை அவர் தனது வேலையை இழந்துள்ளார். சமீபத்தில், வால... மேலும் பார்க்க

UPI: இன்று முதல் யு.பி.ஐ-யில் அமலுக்கு வரும் 7 ரூல்ஸ்; என்னென்ன தெரிந்துகொள்வோமா?

இன்று ஆகஸ்ட் 1. இன்று முதல் யு.பி.ஐ-யில் (UPI) ஒரு சில மாற்றங்கள் வர உள்ளதாக முன்னர் தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்... வாங்க...யு.பி.ஐ பரிவர... மேலும் பார்க்க

Google: ரூ.50,000 கோடி; ஆந்திராவில் `ஆசியாவின்' மிகப்பெரிய Data Center; கூகுளின் ப்ளான் என்ன?

50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர்... மேலும் பார்க்க

`AI தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்கும்?' - மைக்ரோசாப்ட் ஆய்வு சொல்வதென்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு, ஏஐயால் இயக்கப்படும் சாட்பாட் தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.மைக்ரோசாப்டின் கோபைலட் (C... மேலும் பார்க்க