செய்திகள் :

Maxwell: ``அணியை ஏமாற்றுவதுபோல் உணர்ந்தேன்'' - ODI போட்டியிலிருந்து விடைபெற்றார் உலகக் கோப்பை நாயகன்

post image

சமகால கிரிக்கெட்டில் ஓயிட் பால் ஃபார்மெட்டில் எந்த நேரத்திலும் வெற்றியைத் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு அசாத்திய வீரர் ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தானுடன் லீக் போட்டியில் வெற்றிபெற்றால்தான் அரையிறுத்திருக்கு முன்னேற முடியும் என்ற போட்டியில், 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இனி வெற்றிபெற 99 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்ற நிலைக்குச் சென்றது ஆஸ்திரேலியா.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

அந்த நேரத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் வலியல் துடித்துக்கொண்டிருந்த மேக்ஸ்வெல், 1 சதவிகித நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இரட்டை சதமடித்து போட்டியையும் வென்றுகொடுத்து ஆஸ்திரேலியாவை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றினார்.

அதன்பிறகு, இறுதிப்போட்டியில் இந்தியாவை பேட் கம்மின்ஸ் சைலன்ட்டாக்கிய சம்பவமெல்லாம் தனி வரலாறு. ஆனால், அந்த வரலாறு நிகழ முக்கிய காரணம் ஆப்கானிஸ்தானுக்கெதிரான போட்டியில் மேக்ஸ்வெல் போட்ட விதைதான்.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

அந்த ஒரு இன்னிங்ஸ் போதும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், குறிப்பாக ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் மேக்ஸ்வெல்லின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

இப்படியான சாதனைக்குச் சொந்தக்காரரான மேக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.

தி ஃபைனல் வேர்ட் பாட்காஸ்ட் (The Final Word Podcast) நேர்காணலில் இன்று (ஜூன் 2) பேசிய மேக்ஸ்வெல், "ஆரம்ப காலத்தில், எனக்கான நேரத்துக்கு முன்பாகவே அணியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

எதிர்பாராத விதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்காக ஓரிரு போட்டிகளில் விளையாடினாலே எனக்குப் பெருமை. அது நடக்கும் என்று நான் நினைத்தேன்.

பிறகு, அணியிலிருந்து நான் நீக்கப்பட்டேன், மீண்டும் சேர்க்கப்பட்டேன். சில உலகக் கோப்பைகளில் விளையாடினேன், சிறந்த அணிகளில் ஒரு பகுதியாக இருந்தேன்.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

இப்போது, சூழ்நிலைகளுக்கு உடல் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்கும்போது, அணியை நான் ஏமாற்றுவது போல் உணர்ந்தேன்.

எனவே, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்திருக்கிறேன்.

ஜார்ஜ் பெய்லியிடம் (ஆஸி கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர்) உரையாடினேன். 2027 உலகக் கோப்பை குறித்துப் பேசினோம்.

அப்போது அவரிடம், "நான் அதுவரை தொடர்வேன் என்று நினைக்கவில்லை. என்னுடைய இடத்தில் வேறு வீரர்களை ஆட வைத்து, அந்த இடத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளத் திட்டமிட வேண்டிய நேரம் இது. அதைத் தக்கவைத்துக்கொள்ள அவர்களுக்கு போதுமான வழி கிடைக்கும்" என்று கூறினேன்.

விளையாடுவதற்கு நல்ல நிலையில் நான் இருக்கிறேன் என்றால் என்னுடைய இடத்தை நான் கொடுக்கப் போவதில்லை என்று எப்போதும் நான் கூறுவேன்.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

ஓரிரு தொடர்களுக்கு மட்டும் இருந்துகொண்டு, சுயநல காரணங்களுக்காக விளையாட விரும்பவில்லை.

அவர்கள் (ஆஸ்திரேலியா) சரியான தெளிவான பாதையில் நகர்கிறார்கள். அந்தத் திட்டமிடல் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறினார்.

 ஜார்ஜ் பெய்லி
ஜார்ஜ் பெய்லி

மேக்ஸ்வெல்லின் ஓய்வு குறித்து பேசிய ஜார்ஜ் பெய்லி, "ஒருநாள் கிரிக்கெட்டின் துடிப்பான வீரர்களில் ஒருவராக மேக்ஸ்வெல் அறிப்படுவார்.

இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதற்காக அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் தனித்து நிற்கின்றன.

டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு அவர் இன்னும் நிறைய பங்காற்ற வேண்டும்.

எல்லாம் சரியாக நடக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உலகக் கோப்பை வருவதால், அணியில் அடுத்த 12 மாதங்கள் அவர் முக்கிய பங்கு வகிப்பார்." என்று தெரிவித்தார்.

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார... மேலும் பார்க்க

RCB: "மாநிலத்துக்காக விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?" - நீதிமன்றத்தில் காரசார வாதம்

பெங்களுருவில் நேற்று (ஜூன் 4) ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத... மேலும் பார்க்க