செய்திகள் :

Met Gala: ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்..

post image

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த `மெட் காலா' என்ற நிகழ்ச்சியில் பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

அங்கு நடந்த பேஷன் ஷோவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக கலந்து கொண்டார். நிதி திரட்டுவதற்காக நடந்த பேஷன் ஷோவில் ஷாருக்கான் சிவப்பு கம்பளத்தில் வாக்கிங் சென்றார்.

ஷாருக்கான்

அவர் பெங்கால் புலி வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட 18 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட வாக்கிங் கம்பு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு பாலிவுட்டில் கிங் என்பதை உறுதிபடுத்தும் வகையில் கே என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நெக்லஸ் அணிந்து வாக்கிங் சென்றார்.

பாலிவுட்டில் இருந்து ஒருவர் இந்த பேஷன் ஷோவில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். ஷாருக்கான் இந்த பேஷன் ஷோவில் பங்கேற்றதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கு 5.3 மில்லியன் லைக் வந்திருந்தது. அதோடு ஷாருக்கான் மூலம் இந்த நிகழ்ச்சியில் 19 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.

லிஷா

இந்த நிதி திரட்டும் பேஷன் ஷோ மூலம் மொத்தம் 1.3 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டப்பட்டது. இதில் ஷாருக்கான் மூலம் தான் அதிக பட்சமாக 19 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்ற பெருமை ஷாருக்கானுக்கு கிடைத்து இருக்கிறது. ஹாலிவுட்டில் யாரும் இந்த அளவுக்கு நிதி திரட்டிக்கொடுக்கவில்லை. கார் பந்தய வீரர் லெவிஸ் ஹெமில்டன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 9.4 மில்லியன் நிதி திரட்டி கொடுத்தார்.

மூன்றாவது இடத்தில் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் தில்ஜித் வந்துள்ளார். பெண்கள் பிரிவில் தாய்லாந்தை சேர்ந்த பாடகி லிஷா முதலிடம் வந்துள்ளார். அவர் 21 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டியுள்ளார்.

`தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து ராணுவ வீரர்கள் செயல்பட்டார்கள்' - பாராட்டி நெகிழும் ஆலியா பட்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

போர் பதற்றத்தைக் குறைக்கச் சொன்ன ஆலியா பட்டின் தாயார்; குடியுரிமை குறித்து நெட்டிசன்கள் கேள்வி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று சொன்னவர்கள் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்கள்.சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். நடிகர் சல்மான் கான் கூட போ... மேலும் பார்க்க

"தமிழ் சினிமா பாடல்களில் ஆங்கிலம்தான் அதிகம் இருக்கிறது; முன்பெல்லாம்..." - அனுராக் காஷ்யப் வேதனை

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா', 'Rifle Club' படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தா... மேலும் பார்க்க

Anurag Kashyap: "பான் இந்தியா படம் என்ற பெயரில் பெரிய ஊழல் நடக்குது" - கொதிக்கும் அனுராக் காஷ்யப்

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்காக போரை நிறுத்திய ஆப்கானிஸ்தான் அதிபர் மகள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இப்போது போர்பதட்டம் நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பு ஒன்றுக்காக உள்நாட்டு போர் நிறுத்தப்பட்ட சம்பவம் இப்போது நினைவுகூர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. பாகி... மேலும் பார்க்க

Operation Sindoor: வியாபாரமாகிறதா தேசபக்தி? தலைப்புக்குத் தயாரிப்பாளர்களிடையே போட்டி; நிலவரம் என்ன?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த வாசகம் இந்தியா முழுவதும் தேசபக்திக்கான அடையாளமாக மாறியிருக்கிறது.அதனால் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் வார்த்... மேலும் பார்க்க