செய்திகள் :

Pakistan: லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம்; மீண்டும் தாக்குதலா... என்ன நடந்தது?

post image

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் வியாழக்கிழமை (மே 8) காலையில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இந்தியா பாகிஸ்தானில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் குண்டு வெடிப்பு சத்தத்தால் மக்கள் பீதியடைந்து, தங்கள் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டுள்ளனர்.

மூன்றுமுறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுவரையில் குண்டுவெடிப்பு சத்தத்துக்கான சரியான காரணம் தெரியவரவில்லை.

பஹல்காமில் 26 அப்பாவி இந்தியர்கள் படுகொலையில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள இந்தியா, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை நடத்தி முடித்திருக்கிறது.

இந்த நடவடிக்கையின்போது 31 அப்பாவி பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், இந்தியாவின் விமானங்கள் சுடப்பட்டதாக கூறுவது தவறான தகவல் எனக் கூறியுள்ளது.

பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய தாக்குதலில் 13 ந்தியர்கள் மரணமடைந்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்ததாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Operation Sindoor
Operation Sindoor

Pakistan நிலை என்ன?

இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு இன்று (மே 8) காலையில் பெரும்பாலான பாகிஸ்தானிய நகரங்கள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளன. குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எல்லையை ஒட்டிய பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அரசு இந்தியாவின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி தரப்படும் எனக் உறுதியேற்றுள்ளது எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் பத்திரிகை பேட்டியில் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தான் லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் பேச்சுபொருளாகியிருக்கிறது.

இதற்கிடையில் உலக நாடுகள், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!

'பதற்றம்!'இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் இப்போது ஒரு புதிய அப்டேட் கிடை... மேலும் பார்க்க

Live: ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!

ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரம... மேலும் பார்க்க

இந்தியா - பாக்., எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 முக்கிய நடவடிக்கைகள்!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவ... மேலும் பார்க்க

Operation Sindoor : 15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்; வானிலே முறியடித்த இந்திய ராணுவம் - முழுத் தகவல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எ... மேலும் பார்க்க

மோடி 'ஆப்சென்ட்', 'இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை'... - அனைத்துக் கட்சி கூட்ட நிகழ்வுகள்

நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் கூடங்களை குறிவைத்து தாக்கியது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: எல்லையில் தயார் நிலையில் டிரோன் எதிர்ப்பு கருவிகள்; விமான நிலையங்கள் மூடல்

சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்தது. நேற்று நாடு முழுவதும் போர்ஒத்திகை நட... மேலும் பார்க்க