செய்திகள் :

Pawan Kalyan: ``பெண்களை அவமதிப்பது ஆண்மை ஆகாது" -ஈவ் டீசிங் செய்பவர்களை எச்சரித்த பவன் கல்யாண்

post image

ஆந்திரபிரதேசம் மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பெண்களை ஈவ் டீசிங் செய்பவர்கள் மற்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது தொகுதியான பிதாபுரத்தில் உள்ள பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

பெண்களை அவமரியாதையாக நடத்துவதை ஆண்மை என நினைப்பவர்களை கண்டித்த பவன் கல்யாண், சமூகத்தில் பெண்களின் அடிப்படை பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்டினார்.

Women Safety

"ஒரு பெண்ணுக்கு கஷ்டம் கொடுப்பது உன்னை ஆண்மகனாக ஆக்காது. நீ உன் ஆண்மையை நிரூபிக்க விரும்பினால் ஜிம்மாஸ்டிக்ஸ் செய், ராணுவத்தில் சேர்ந்துகொள், தேசத்துக்கு சேவையாற்று. பெண்களை துன்புறுத்துவது ஆண்மையின் வெளிப்பாடு அல்ல, அந்த எண்ணத்தை நாங்கள் அகற்றுவோம். இது என் எச்சரிக்கை" என் பொதுமேடையில் பேசினார் பவன் கல்யாண்.

சமூகத்தில் பெண்களின் பாத்திரத்தை எடுத்துரைக்கும் விதமாக, "எல்லா வீடுகளிலும் ஒரு பெண் இருக்கிறார். பெண்கள் இல்லாமல் இங்கு படைப்புகள் இல்லை." என்றார்.

மேலும், "காவல்துறையினருக்கு நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். பிதாபுரத்தில் நான் ஈவ் டீசிங் என்ற வார்த்தையைக் கூட கேட்கக்கூடாது. இது என் உத்தரவு." என்றார்.

பவன் கல்யாண்

"என்னால் இங்கு இருக்கும் பெண்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், நான் துணை முதலமைச்சராக இருப்பதற்கு என்ன அர்த்தம்?" என விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக கேள்வி எழுப்பினார் பவன் கல்யாண்.

பொது இடங்களில் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரிப்பதாகவும் ஆந்திராவில் பேச்சுகள் எழுந்த நிலை இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.

Doctor Vikatan: 'காதலிக்க நேரமில்லை' பட ஸ்டைலில் விந்தணு தானம்: நிஜத்தில் எப்படி நடக்கும்?

Doctor Vikatan: சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் 'காதலிக்க நேரமில்லை' படம் பார்த்தேன். படத்தில் நடிகர் வினய், விந்தணுதானம் கொடுக்க மருத்துவமனைக்குச்செல்வார். கூடவே தன் நண்பர் ஜெயம் ரவியையும்அழைத்துச்... மேலும் பார்க்க

Health: கால்களுக்காகத்தான் காலணி; காலணிக்காக கால்கள் இல்லை..!

உயரத்தை வைத்தும் மனிதர்களை மதிப்பிடும் காலம் இது. குறைந்தது ஐந்தரை அடி உயரமாவது இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். உயரக் குறைவுப் பிரச்னைக்கான அழகியல் தீர்வாக முதலில் ஹீல்ஸ் செருப்புகள் அ... மேலும் பார்க்க

``அது தூத்துக்குடி அல்ல; தனுஷ்கோடி" -ரயில்வே விளக்கம்; மத்திய அரசை சாடும் சு.வெங்கடேசன்!

மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் கைவிடப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ரயில்வேமதுரை, விருதுநக... மேலும் பார்க்க

``நீர் ஆதாரத்தை வழங்கியவருக்கு மரியாதை" -தேவராட்டம், சிலம்பாட்டத்துடன் தேனியில் பென்னிகுக் பொங்கல்!

முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீராதாராமாக உள்ளது. எனவே விவசாயிகள் பலரின் வீடுகளிலும் அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் படம் கடவுளுக்கு நிகராக மாட்டப்பட்டிருக்கிறது. பென... மேலும் பார்க்க

Congress: `இந்திரா பவன்' காங்கிரஸின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு... | Photo Album

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்திரா பவன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தை மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து ரிப்பன் வெட்டி சோனியா காந்தி திற... மேலும் பார்க்க

Rahul Gandhi: ``தேச துரோகம்'' - RSS தலைவரை கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உண்மையான சுதந்திரம் ராமர் கோவில் திறப்பில்தான் கிடைத்தது என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மேலும் மோகன் பகவத... மேலும் பார்க்க