பாஜக அரசால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்: புதிய வரவாக சிந்தூர்புரம்! 11 ஊர்ப் பெயர்க...
Post office-ல் இனி UPI மூலம் பணம் செலுத்தும் வசதி; சோதனை முயற்சியில் வெற்றி
யு.பி.ஐ - இது இந்தியாவில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளின் இண்டு இடுக்குகளில் கூட உட்புகுந்துவிட்டது. இனி போஸ்ட் ஆபீஸ்களிலும் யு.பி.ஐ வசதி வரப்போகிறது.
இதுவரை இந்தியாவின் போஸ்ட் ஆபீஸ்களில் இந்த வசதி இல்லை. காரணம், போஸ்ட் ஆபீஸ்களின் ஐ.டி சிஸ்டமோடு, யு.பி.ஐ இணைக்கப்படவில்லை.
ஆனால், இனி வரும் ஆகஸ்ட் முதல் போஸ்ட் ஆபீஸ்களில் யு.பி.ஐ பேமென்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதனால், போஸ்ட் ஆபீஸ் கவுன்டர்களின் முன், கியூ.ஆர் கோடு வைக்கப்படும். இதை ஸ்கேன் செய்து, பேமென்ட் செய்துகொள்ளலாம்.
இந்த நடைமுறை முன்பும் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், தொடர் தொழில்நுட்ப கோளாறுகளால் அது பாதியில் நிறுத்தப்பட்டது. இப்போது அந்தக் குறைகள் எல்லாம் சரிசெய்யப்பட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதன் பைலட் சோதனை கர்நாடகாவின் மைசூரு தலைமையம் உள்ளிட்ட சில இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை வெற்றிகரமாக நடக்கிறது என்றும் கூறப்படுகிறது.