செய்திகள் :

RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?

post image

'விடாத மழை!'

பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக ரத்தாகியிருக்கிறது. இதனால் இரு அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டி ரத்தானதால் ப்ளே ஆஃப் ரேஸில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது?

சின்னசாமி மைதானம்
சின்னசாமி மைதானம்

'வெளியேறிய கொல்கத்தா!'

இந்தப் போட்டி ரத்தாகியிருப்பதால் கொல்கத்தாவுக்குதான் பெரிய பின்னடைவு. ஏனெனில், கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்ல இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டியது கட்டாயம் என்ற நிலை இருந்தது. இப்போது போட்டி ரத்தாகியிருப்பதால், 13 போட்டிகளில் ஆடி 12 புள்ளிகளை மட்டுமே கொல்கத்தா பெற்றிருக்கிறது.

எஞ்சியிருக்கும் போட்டியை கொல்கத்தா வென்றாலும் 14 புள்ளிகளை மட்டுமே பெறும். 14 புள்ளிகளை வைத்துக் கொண்டு ஒரு அணி ப்ளே ஆப்ஸூக்குள் நுழையும் நிலை இப்போது இல்லை. அதனால் கொல்கத்தா அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து தொடரை இழந்திருக்கிறது.

RCB
RCB Team

'பெங்களூருவின் நிலை!'

பெங்களூரு அணி இந்தப் போட்டியை வென்றிருந்தால் முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு சென்றிருக்கும். ஆனால், இந்தப் போட்டி ரத்தாகி ஒரு புள்ளி மட்டுமே கிடைத்ததால் பெங்களூரு அணி இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது. பெங்களூரு அணி இப்போது 12 போட்டிகளில் ஆடி 17 புள்ளிகளில் இருக்கிறது.

RCB
RCB

நாளை ராஜஸ்தானுக்கும் பஞ்சாபுக்கும் இடையேயான போட்டியும் குஜராத்துக்கும் டெல்லிக்கும் இடையேயான போட்டியும் நடக்கவிருக்கிறது. இதில், டெல்லி அணியோ பஞ்சாப் அணி அல்லது இரண்டு அணிகளுமே தோற்றால் நாளையே பெங்களூரு அணி ப்ளே ஆப்ஸூக்கு சென்றுவிடும். இல்லையேல், பெங்களூரு அணி இன்னும் காத்திருக்க வேண்டும்.

Neeraj Chopra: கனவாக இருந்த 90 மீ இலக்கு; இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை; எப்படிச் சாதித்தார் நீரஜ்?

'நீரஜ் சோப்ரா - 90 மீ மார்க்!'நீரஜ் சோப்ரா தனது கரியரில் இதுவரை எட்டாத இலக்கை எட்டியிருக்கிறார். தோஹாவில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் 90.23 மீட்டருக்கு ஈட்டியை வீசி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். 90... மேலும் பார்க்க

``அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது'' - சாதனைப் படைத்த நீரஜ் சோப்ரா; வாழ்த்திய மோடி

90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்து இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்திருக்கிறார்.தடகள வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் சர்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியாவி... மேலும் பார்க்க

Neeraj Chopra : 'பாகிஸ்தான் வீரருடன் நெருங்கிய நட்பில் இல்லை!' - நீரஜ் சோப்ரா விளக்கம்!

'நீரஜ் சோப்ரா விளக்கம்!'ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சார்ந்து சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்திருந்தது. நீரஜ் சோப்ரா (Neeraj Chopra)அதாவது, பெங... மேலும் பார்க்க

Mumbai Indians : 'ப்ளே ஆப்ஸூக்காக ஜானி பேர்ஸ்டோவை அழைத்து வருகிறதா மும்பை?' - லேட்டஸ்ட் அப்டேட்

இந்தியா - பாகிஸ்தான் பதற்றநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிகள் தள்ளிப்போய் தேதி மாறியதால் சில வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய போட்டிகள... மேலும் பார்க்க

IPL Playoffs : 'மும்பைக்குதான் பெரிய பிரச்னை' - எந்தெந்த அணிகள் ப்ளே ஆப்ஸூக்கு செல்லும்?

தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கவிருக்கிறது. நடப்பு சீசனின் க்ளைமாக்ஸை எட்டிவிட்டோம். இன்னும் 13 லீக் போட்டிகள்தான் எஞ்சியிருக்கிறது. ஆனால், இன்னமும் எந்த அணியும் ... மேலும் பார்க்க