செய்திகள் :

Salt: `தினசரி சாப்பிடும் உப்பால் ஆண்டுதோறும் 1.9 மில்லியன் இறப்புகள்..!' - WHO அதிர்ச்சி தகவல்!

post image

அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் ஆண்டுதோறும் 1.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக WHO தெரிவித்துள்ளது. சோடியம் நிறைந்த நுகர்வுகளை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உப்புக்கு மாற உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாகவும் WHO தெரிவிக்கிறது.

சமையலில் எல்லா உணவுகளுக்கும் கண்டிப்பாக சேர்க்கக்கூடிய பொருள் என்றால் அது உப்புதான். தவிர்க்க முடியாத உணவுப்பொருளும் உப்பு தான். தவிர்க்க வேண்டிய உணவுப் பொருளும் இதுதான். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி அதிகப்படியான உப்பு உட்கொள்ளுதல் விளைவாக, உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.9 மில்லியன் இறப்புகள் ஏற்படுகிறது.

சுகாதார நிபுணர்களின் தொடர்ச்சியான எச்சரிக்கைக்குப் பிறகும் பலர், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக சோடியத்தை உட்கொள்கிறார்கள். அதிக உப்பு உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவற்றிற்கு வழிவகுப்பதாக WHO தெரிவிக்கிறது. இதற்கு ஒரு தீர்வாக பொட்டாசியம் நிறைந்த உப்பை மக்கள் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

WHO - உலக சுகாதார நிறுவனம்

WHO சொல்வதென்ன?

மனிதனின் உடலுக்கு உப்பு அவசியம் என்றாலும், அதனை அளவுக்கு அதிகமாக மக்கள் உட்கொள்கின்றனர். தினசரி 2 கிராம் சோடியம் உட்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 4.3 கிராமுக்கு மேல் உட்கொள்கிறார்கள். 2013 ஆம் ஆண்டில் WHO உறுப்பு நாடுகள் 2025க்குள் மக்கள் சோடியம் உட்கொள்ளலை 30 சதவீதம் குறைப்பதாக உறுதியளித்தன. ஆனால் ஆஸ்திரேலியா போன்ற பெரும்பாலான நாடுகள் இந்த இலக்கை அடைய வாய்ப்பில்லை. எனவே இந்த இலக்கு தற்போது 2030 ஆம் ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

WHO வழிகாட்டுதல்

மக்கள் பொட்டாசியம் நிறைந்த உப்புக்கு மாற பரிந்துரைக்கப்படுகிறது.

தினசரி 3.5 கிராம் பொட்டாசியம் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த மாற்றம் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய நோய், பக்கவாதம் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

Eye Health: கூலர்ஸ்... ஸ்டைலுக்கா? கண்களைப் பாதுகாக்கவா? - மருத்துவரின் தெளிவான விளக்கம்

''சில நாட்களுக்கு முன்பு, 'கண் நல்லாதான் இருக்கு... சும்மா ஒரு டெஸ்ட் செஞ்சுக்கலாமேனு வந்தேன்’ என்று ஒருவர் வந்தார். அவரைப் பரிசோதித்ததில், அதிர்ச்சி. அவரின் கண் நரம்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிர... மேலும் பார்க்க

Doctor Vikatan: திட்டமிடாமல் உருவாகிவிட்ட கர்ப்பம்... அபார்ஷன் மாத்திரை பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: என்வயது 38. தாம்பத்திய உறவின்போது பெரும்பாலும் கவனமாகவே இருப்பேன். ஆனால், இந்த முறை ஏதோ அலட்சியத்தில், கரு தங்கிவிட்டது. ஏற்கெனவேஇரண்டு குழந்தைகள் இருப்பதால், இந்த வயதில் இன்னொரு குழந்... மேலும் பார்க்க

Valentine's Day: 'ஒரு முத்தத்தில் 12 கலோரிகள்...' - முத்தம் கொடுப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நம் தினசரி அலைச்சல், உளைச்சல்களிலிருந்து விடுதலை கொடுத்து அன்பின் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாயில்தான் முத்தம். முத்தம் கொடுக்கவும் பெறவும் இனம், பாலினம், வயது என எந்த வரம்புகளும் இல்லை. வாழ்வ... மேலும் பார்க்க

5 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் மருத்துவர் - சுகாதாரம் குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக குளிக்காமல் இருப்பதாக கூறியிருக்கிறார். ஐந்து வருடங்களாக குளிக்காமல் இருக்கும்போதும் கூட தன்மீது எந்தவிதமான துர்நாற்றமும் வீசவில்லை என... மேலும் பார்க்க

Cancer Awareness: 9 பேரில் ஒருவருக்கு கேன்சர் ரிஸ்க்... என்னதான் காரணம்?

குழந்தை பேறு தொடர்பான மருத்துவமனைகள், நீரிழிவுக்கான மருத்துவமனைகளையடுத்து சமீப சில வருடங்களாக எங்குப் பார்த்தாலும் கேன்சர் மருத்துவமனைகள் கண்ணில்பட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. ராஜீவ் காந்தி அரசு மர... மேலும் பார்க்க

Apollo: அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை வகைப்படுத்த அரசுக்கு வலியுறுத்தல்!

உலக புற்றுநோய் தின அனுசரிப்பின் ஒரு பகுதியாக யுனிஃபை டு நோட்டிஃபை என்ற தேசிய அளவிலான பரப்புரை திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் முன்னெடுக்கிறது.இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்களது சங்கம் (AROI... மேலும் பார்க்க