செய்திகள் :

South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி

post image
தென் கொரியாவில் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், இரண்டு சீனர்கள், இரண்டு தென் கொரியர்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தேசிய மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், திடீரென சரிந்து விழும் அந்தப் பாலத்தால் அந்தப் பகுதி தூசுகளால் சூழப்பட்டிருக்கிறது. கட்டுமான தளத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான ஹூண்டாய் பொறியியல் நிறுவனம், ``எங்கள் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தவர்களின் குடும்பத்திடமும், காயமடைந்தவர்களிடமும் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம். காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

புதுக்கோட்டை: எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடியதால் விபரீதம்... மருத்துவமனையில் 4 சிறுவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராசு. இவரது மகன் ரிசிகேஷ் (வயது-6). அதே பகுதியைச் சேர்ந்தவர்களான பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5... மேலும் பார்க்க

சிவகங்கை: மேடையில் ஆடும்போதே உயிரிழந்த நடனக் கலைஞர்; புத்தகத் திருவிழாவில் நடந்த சோகம்

சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டு... மேலும் பார்க்க

Ooty: கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த தாய்; சடலமாய் குழந்தைகள்; ஊட்டியை உலுக்கிய துயரம்; நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்- ஷாலினி தம்பதி. இவர்களுக்கு நித்தீஷ் என்கிற 5 வயது ஆண் குழந்தையும், பிரிநிதா என்கிற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலை... மேலும் பார்க்க

Maharashtra: போலீஸிடமிருந்து தப்பிக்க மணலைக் கொட்டிய லாரி ஓட்டுநர்; உயிரோடு புதைந்த தொழிலாளர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்காலிக குடிலில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரியில் கொண்டு வரப்பட்ட மணலைப் போட்டதில் 5 உயிரிழந்துள்ளனர்.ஜல்னா மாவட்டத்தில் இருக்கும் பசோடி சிவார் என்ற இடத்தில் மேம்பாலம் ... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கப்பாதை இடிந்து விபத்து; உள்ளே சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் - மீட்புப் பணிகள் தீவிரம்!

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில், இன்று காலையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற... மேலும் பார்க்க

மதுரை: ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்... பணி செய்யும் ஸ்டேஷனிலேயே உயிரிழந்த சோகம்

கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேசகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு கள்ளிக்குடி ர... மேலும் பார்க்க