செய்திகள் :

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

post image

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர்களால் திருப்பிக் கொண்டுவர முடியுமா?" எனக் காட்டமாகக் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்றம்.

மேலும், "டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் உடனடியாக ஒரு தெரு நாய் விடாமல் அனைத்தையும் பிடிக்க வேண்டும்" என்று டெல்லி அரசுக்கு 8 வாரங்கள் கெடு விதித்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், விலங்குகள் நல உரிமைகளுக்காகப் போராடும் பீட்டா (People for the Ethical Treatment of Animals) அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறது.

பீட்டா அமைப்பின் India's Senior Director of Veterinary Affairs மினி அரவிந்தன் தனது அறிக்கையில், "சமூகத்தினர் அக்கம் பக்கத்திலுள்ள நாய்களை குடும்பமாக நினைக்கிறார்கள்.

நாய்களை இடம்பெயர்த்து சிறையில் அடைப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. அது பலனளித்ததும் இல்லை.

2022-23ல் எடுத்த கணக்கெடுப்பின்படி டெல்லியில் 10 லட்சம் நாய்கள் உள்ளன. அவற்றில் பாதிக்கும் குறைவானவை மட்டுமே கருத்தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இப்போது, டெல்லியின் தெருக்களிலிருந்து 10 லட்சம் நாய்களை அகற்றுவது அவற்றைக் கவனித்துக் கொள்பவர்களிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தும்.

மேலும் இது மிகப்பெரிய அளவில் நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இறுதியில் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவோ, வெறி நாய்க்கடியைக் குறைக்கவோ இது ஒன்றும் செய்யாது.

PETA India - பீட்டா இந்தியா
PETA India - பீட்டா இந்தியா

நாய் கருத்தடை திட்டத்தை டெல்லி அரசு ஒழுங்காகச் செயல்படுத்தியிருந்தால், இன்று சாலையில் எந்த நாய்களும் இருந்திருக்காது.

பயனற்ற மற்றும் மனிதாபிமானமற்ற இடப்பெயர்ச்சி நடவடிக்கைகளில் நேரம், பொதுமக்களின் பணம் வீணாக்குவதற்குப் பதில், கருத்தடை திட்டமே இன்னும் தீர்வாகவும் அவசரத் தேவையாகவும் உள்ளது.

சட்டவிரோதமாகச் செயல்படும் செல்லப்பிராணி கடைகளை மூட வேண்டும். தெருநாய்களை காப்பகங்களில் சேர்ப்பது அல்லது தத்தெடுக்க வைப்பது ஆகியவற்றுக்கு மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர... மேலும் பார்க்க

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வ... மேலும் பார்க்க

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்' 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதா... மேலும் பார்க்க

"அதிமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்"-எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 11-வது நாளாகத... மேலும் பார்க்க

தெருநாய்க்கடி: "போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?"- அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து... மேலும் பார்க்க

பெங்களூரு: முடிவுக்கு வந்த நீண்டநாள் காத்திருப்பு; மெட்ரோ மஞ்சள் பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர்!

பெங்களூருவின் போக்குவரத்து வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு முக்கிய நாள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மஞ்சள் மெட்ரோ லைன்’ நேற்று (ஆகஸ்ட் 10, 2025) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த... மேலும் பார்க்க