செய்திகள் :

Tasmac : `ஆகாஷ் பாஸ்கரன் அப்போ பள்ளி சென்று கொண்டிருந்தார்’ ; உயர் நீதிமன்றம் ED-க்கு போட்ட உத்தரவு!

post image

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு வழக்கு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சீல் அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம்
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எதனடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற காரணத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை எனக்கூறி ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

வீடு சீல் வைக்கப்படவில்லை!

இதனையடுத்து, வீட்டை சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத பொழுது, எப்படி சீல் வைக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், ``வீடு சீல் வைக்கப்படவில்லை” என்றும் தங்களை தொடர்பு கொள்ளாமல் கதவை திறக்க வேண்டாமென்று நோட்டீஸ் மட்டும் தான் ஒட்டப்பட்டதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், `தன்னுடைய வீட்டுக்குள் செல்ல அவர் அமலாக்கத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமா?’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், அந்த நோட்டீஸை அகற்றிவிடுவதாக கூறினார்.

 சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்று கொண்டிருந்தார்!

நோட்டீஸ் ஒட்ட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒன்றை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ``2014 முதல் 2021-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி பார் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்று கொண்டிருந்தார்” தெரிவித்தார்.

இதனையடுத்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ThugLife: `சட்டத்துக்கு மாறான விஷயங்களை..!’ - கர்நாடகா அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வான ... மேலும் பார்க்க

`சீருடையில் இருந்த நிலையிலேயே..!’ - அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய ஏடிஜிபி ஜெயராமன்

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், மணமகனின் சகோதரனான 17 வயது சிறுவனை மணப்பெண்ணின் தந்தை கடத்திய விவகாரமும், அதில் புதிய பாரதம் கட்சி தலைவரும் சட்டமன்ற ... மேலும் பார்க்க

RCB Event Stampede: கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் எழுப்பிய 9 கேள்விகள்; அரசின் பதில் என்ன?

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்.சி.பி அணி கோப்பை வென்றதையடுத்து (ஜூன் 3), அவசர அவசரமாக அடுத்த நாளே பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்திலும், சின்னசாமி ஸ்டேடியத்திலும் ஆர்.சி.பி வீரர்களுக்கு சிறப்பு நிகழ... மேலும் பார்க்க

RCB Stampede: 'முதலமைச்சர் தான் கூட்டம் கூட்டினார்’ - நீதிமன்றத்தில் DNA நிறுவனம் வாதம்

RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் மரணமடைந்த சம்பவத்தில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான டி.என்.ஏ என்டெர்டெயின்மென்ட் மீது குற்றவியல் வழக்கு தொட... மேலும் பார்க்க

ஈமு கோழி மோசடி - சுசி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை.. ரூ.7 கோடி அபராதம்

கொங்கு மண்டலத்தை டிஸைன் டிஸைனாக ஏமாற்றிய மோசடிகளில் ஈமு கோழி மோசடி முக்கியமானது. ஈமு கோழிக்கும், இந்தியாவுக்கும் சம்பந்தமே இல்லை. ஈமு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு வகை பறவை இனமாகும். ஈமு கோழி மோசடி... மேலும் பார்க்க

LGBTQ+ தம்பதிகள் 'திருமணம் இல்லாமல்' குடும்பத்தை உருவாக்க முடியும்- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் குடும்பமாக வாழ முடியும் எனத் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தன்பாலின ஈர்ப்பாளரான பெண் ஒருவர... மேலும் பார்க்க