செய்திகள் :

Tree Aadhar : மனிதர்களுக்கு மட்டுமல்ல... இந்தியாவின் 'இந்த' இடத்தில் மரங்களுக்கும் ஆதார் உண்டு!

post image

உங்களுக்கும், எனக்கும் ஆதார் நம்பர் இருந்தால் ஓகே... இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மரங்களுக்கும் ஆதார் நம்பர் கொடுக்கப்பட்டு வருகிறது என்றால், நம்ப முடிகிறதா?! அது வேறு எங்கும் இல்லை... இந்தியாவின் குளு குளு ஜம்மு - காஷ்மீரில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

Platanus Orientalis என்னும் 'சினார் மரங்கள்' (Chinar) மேற்கு இமய மலைத்தொடரில் உள்ள பள்ளத்தாக்குகளில் அதிகம் காணப்படுகின்றன. இது காஷ்மீரின் மாநில மரமும் கூட. சினார் என்றால் பாரசீக மொழியில் 'என்ன ஒரு நெருப்பு' என்று பொருள். இலையுதிர் காலங்களில் இந்த மரங்களின் இலைகள் மஞ்சள் சிவப்பு (yellow gradient red) நிறத்தில் இருந்ததால், இதனை எரியும் சுடருடன் ஒப்பிட்டு 'சினார்' என்று பெயர் சூட்டியுள்ளார் முகலாய மன்னர் ஜஹாங்கீர்.

ஆதார் கார்டு பிளஸ் கியூ ஆர் கோட்

இம்மரத்தின் இலைகள் காஷ்மீரின் ஒவ்வொரு கால நிலைகளுக்கும் ஏற்ப வகையில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு, ரத்த சிவப்பு, அம்பர் போன்ற பல நிறங்களில் மாறுபடுகிறது. சினார் மரத்தின் இந்த சிறப்பம்சம் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றது. காஷ்மீரின் வரலாறு, இலக்கியம், மொழி என அனைத்திலும் இந்த மரத்திற்கு ஸ்பெஷல் இடம் உண்டும். காஷ்மீரின் கலை மற்றும் கைவினைப் பொருள்களிலும் இந்த மரத்தைக் காணலாம்.

இந்த மரத்தின் பலன்கள் பல. இந்த மரத்தின் இலை மற்றும் பட்டை மருந்தாகப் பயன்படுகிறது. கட்டை தளவாடப் பொருள்கள் தயாரிக்க உதவுகிறது. கிளைகள் மற்றும் வேர்கள் சாயம் செய்ய உதவுகிறது.

இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த மரத்தின் எண்ணிக்கை காஷ்மீர் கட்டமைப்பு, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் சரிய தொடங்கியிருக்கிறது. இந்த மரத்தை அழிவில் இருந்து காப்பாற்ற ஜம்மு காஷ்மீர் அரசு புதிய திட்டம் ஒன்றை 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டம் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒவ்வொரு சினார் மரத்தின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து அந்த மரங்களுக்கு ஆதார் நம்பரும், கியூ.ஆர் கோடும் தரப்பட்டுள்ளது. இந்தக் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தால், குறிப்பிட்ட அந்த மரத்தின் அத்தனை தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். இது சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு, இந்த மரங்களையும் காப்பாற்றலாம் என்று ஜம்மு காஷ்மீர் அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டம் குறித்த உங்கள் கமென்ட்டைக் கீழே தெரிவியுங்கள்!

Tanushka Singh: `பயத்தை உணரவில்லை' - இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி தனுஷ்கா சிங்

பறக்கும் படை அதிகாரியாக (Flying Officer) பணியாற்றி வந்த தனுஷ்கா சிங், இந்திய போர் விமானப்படையில் ஜாகுவார் போர் விமானத்தின் முதல் நிரந்தர பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை போர் விமானப்படையில... மேலும் பார்க்க

வளர்ப்பு பூனை இறந்த துக்கம்; இரண்டு நாள்கள் சடலத்துடன்... 3-வது நாளில் விபரீத முடிவெடுத்த இளம்பெண்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் என்ற இடத்தை சேர்ந்த பூஜா என்ற பெண் திருமணமாகி இரண்டாண்டில் விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து தனது பெற்றோர் வீட்டில் தாயாருடன் வசித்து வந... மேலும் பார்க்க

Elon Musk: தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் 4வது குழந்தை; 14 குழந்தைக்குத் தந்தையானார் எலான் மஸ்க்

எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.53 வயதான எலான் மஸ்க், கடந்த 2021ம் ஆண்டு தனது 'நியூரோலிங்க்' நிறுவனத்தில் பணிபு... மேலும் பார்க்க

பற்றி எரிவது அடுத்தவர் வீட்டுக்கூரைதானே என்று ஆசுவாசமாக இருந்தீர்களென்றால்... | Must Read

அடுத்தவரின் துன்பத்தைக்கண்டு நகைக்கிற இயல்பு நம் மனங்களுக்குள் எப்போது நுழைந்தது..? பாதிக்கப்பட்டவர்களின் ரணம் ஆறுமுன், 'நான் எவ்ளோ பெரிய நியாயக்காரன் தெரியுமா' என்பதை நிரூபிக்கிற அளவுக்கு இதயம் கல்லா... மேலும் பார்க்க

பனி மலையில் 10 நாள்களாக சிக்கிய இளைஞர் - டூத்பேஸ்ட் சாப்பிட்டு உயிரை காப்பாற்றிக் கொண்டது எப்படி?

பனிமலையில் பத்து நாள்களாக சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர், ஆற்று நீர், உருகிய பனி, டூத்பேஸ்ட் ஆகியவற்றை சாப்பிட்டு தன்னை உயிருடன் வைத்திருக்கிறார். எப்படி அந்த மலையில் மாட்டிக்கொண்டார், எப்படி மீட்கப்பட்ட... மேலும் பார்க்க