செய்திகள் :

Vaiko: ``தமிழ் ஈழ விடுதலைகாக வீர உரையாற்றினேன்; அதற்காக..'' - வைகோவின் கடைசி மாநிலங்களவை உரை

post image

இன்றுடன் மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

1978, 1984, 1990 என தொடர்ச்சியாக மூன்று முறை கலைஞர் கருணாநிதியால் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் ஸ்டாலினால் 2019-ல் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டவர் வைகோ.

வைகோ

மாநிலங்களவையில் தனது கடைசி நாளில் உரையாற்றி வரும் வைகோ, “1978ஆம் ஆண்டு என்னை முதன்முதலாக மாநிலங்களவைக்கு அனுப்பியவர் கலைஞர். அதைத்தொடர்ந்து 1984, 1990 எனத் தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பினார். அவருக்குப் பிறகு திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2019-ம் ஆண்டு என்னை இந்த மாநிலங்களவைக்கு அனுப்பினார். திமுக நாடாளுமன்றக் குழு தலைவராக இருந்த முரசொலி மாறனால் வார்த்தெடுக்கப்பட்டவன் நான்.

அண்ணா சொன்னது

இந்த மாநிலங்களவையில் பல தலைவர்களை எதிர்கொண்டிருக்கிறேன். பல தலைவர்களுடன் பயணித்திருக்கிறேன். 1963ஆம் ஆண்டு, ஏப்ரலில் அண்ணா தனது பாராளுமன்ற உரையில் 'I belong to dravidian stock' என்று குறிப்பிட்டுப் பேசினார். அண்ணாவின் அந்த உரை தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களில் இருந்து தனித்துக் காட்டியது. அதைப் பின்தொடர்ந்து இங்கு இருக்கும் என் சக மாநிலங்களவை உறுப்பினர்களும், இனி வருபவர்களும் தமிழ்நாட்டை தனித்துவத்துடன் உயர்த்த பாடுபட வேண்டும்.

வைகோ

தமிழ் ஈழ படுகொலை

தமிழ் ஈழ படுகொலைக்கு நீதி கேட்டும், இனப்படுகொலை செய்த இலங்கை சிங்கள அரசின் கொடுஞ் செயலை அம்பலப்படுத்தியும் 13 வீர உரைகள் ஆற்றி, இந்த மாநிலங்களவையில் முழங்கியிருக்கிறேன். அதற்காக என் விசா (Visa) முடக்கப்பட்டது, சிறை சென்றிருக்கிறேன், இன்னும் பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் வலிகள், சோகங்கள் நிறைந்ததாக இருந்தாலும் என்றும் என்வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள்.

நாம் வெற்றி, தோல்வி, துரோகம் எனப் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் துவண்டுவிடக்கூடாது. என்னவானாலும் கடைசிவரை தமிழ் மக்களுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் என் வீர வாளைச் சுழற்றிக் கொண்டேதான் இருப்பேன்.

நன்றி. வணக்கம்” என்று தனது கடைசி மாநிலங்களவை உரையில் குறையாத வேகத்துடன் பேசியிருக்கிறார் வைகோ.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Today Roundup: மோடி தமிழ்நாடு வருகை டு சேரனின் ராமதாஸ் பயோபிக் | Headlines

இன்றைய நாளின் (ஜூலை 25) முக்கியச் செய்திகள்!*முதல்வர் மு.க.ஸ்டாலின்: பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (BiharSIR) கைவிட வேண்டும். முழுவீச்சில் தமிழ்நாடு இதற்கு எதிராகப... மேலும் பார்க்க

Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்படுகின்றது.இந்த ... மேலும் பார்க்க

OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அதிரடி நடவடிக்கையும்!

ஆபாசம் நிறைந்த வசனங்கள், காட்சிகள், காணொலிகள் இருப்பதாகக் கூறி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 25 ஓடிடி செயலிகளுக்குத் தடைவிதித்திருக்கிறது. சில ஓடிடி செயலிகள் ஆபாசமான காணொலிகள், வெப்சீரிஸ், ... மேலும் பார்க்க

Kamal Haasan: ``காந்தி, அம்பேத்கர், பெரியாரின் எண்ணங்கள் என் நரம்புகளில் ஓடுகிறது. ஆனால்..!" - கமல்

இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சா... மேலும் பார்க்க

Kamal Haasan: ``கமல்ஹாசன் எனும் நான்... கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன்" - மாநிலங்களவையில் கமல்

இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்!

பிரதமர் மோடி மீது இருக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக தொடர் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இப்போ... மேலும் பார்க்க