செய்திகள் :

Vijay: ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தவெக தொண்டர்களைக் கைது செய்கிறதா போலீஸ்? கொதிக்கும் நிர்வாகிகள்!

post image

சிவகங்கையில் நடந்த காவல் மரணத்தைக் கண்டித்து தவெக சார்பில் இன்று, சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

10 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து கிளம்பிய தொண்டர்களை ஆங்காங்கே காவல்துறையினர் மறித்து வைத்திருப்பதாக நிர்வாகிகள் புகார் கூறுகின்றனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் இந்த ஆர்ப்பாட்டத்தைப் பிரமாண்டமாக நடத்த தவெகவினர் திட்டமிட்டிருந்தனர்.

குறைந்தபட்சமாக 20,000 நிர்வாகிகளைத் திரட்ட தவெக சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கட்சி ரீதியாக உள்ள 120 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தென் மாவட்டங்களிலிருந்து நேற்று மாலையே நிர்வாகிகள் கிளம்பிவிட்டனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்துவதாக நிர்வாகிகள் புகார் சொல்கின்றனர்.

ஆனந்த்
ஆனந்த்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மா.செ ஜாகீர் உசேன் நம்மிடம் பேசுகையில், '2 பஸ்களில் வந்தோம். வாகனத்தில் கொடி கட்டியிருப்பதைப் பார்த்து சென்னைக்குள் நுழையும்போதே காவலர்கள் தடுத்துவிட்டார்கள். நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகுதான் எங்களை அனுமதித்தார்கள்.' என்றார்கள்.

கோவையைச் சேர்ந்த பாபு என்ற மா.செ பேசுகையில், 'குமாரபாளையத்திலேயே எங்களை மறித்தார்கள். வேனிலிருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த பிறகுதான் அனுமதித்தார்கள்.' என்றார்.

தவெக தொண்டர்கள்
தவெக தொண்டர்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக தொண்டர்களை ஒழுங்குபடுத்த மேடையேறிய பொதுச்செயலாளர் ஆனந்த், 'நம்முடைய தொண்டர்களை ஆங்காங்கே கைது செய்து வைத்திருக்கிறார்கள்' எனக் கூறினார்.

காஞ்சிபுரம், விழுப்புரம், ரெட் ஹில்ஸ் போன்ற பகுதிகளிலும் தவெகவினரின் வாகனத்தை காவல்துறை மறிப்பதாகப் புகார் சொல்கின்றனர்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருப்பரங்குன்றம் குடமுழுக்கு: "மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை வேண்டும்" - ராஜன் செல்லப்பா

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்டம் முழுக்க விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல திருப்பரங்குன்றம் குடமுழுக்கிற்கும் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்... மேலும் பார்க்க

வேலூர்: சதுப்பேரியில் படகு சவாரி, இரண்டு செயற்கை தீவுகள்... வேலூரில் புதிய டூரிஸ்ட் பாயிண்ட்!

வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் சதுப்பேரி ஏரியைச் சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வேலூர் சேண்பாக்கம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சதுப்பேரியி... மேலும் பார்க்க

பள்ளிகளில் ‘ப’ வடிவு இருக்கைகள்: "கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?" - அன்புமணி காட்டம்

கேரளாவில் சமீபத்தில் வெளியான `ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற திரைப்படத்தால், பள்ளிகளில் கடைசி பென்ச் மாணவர்கள் என்ற பாகுபாட்டைக் களையும் நோக்கில் வகுப்பறைகளில் `ப' வடிவில் இருக்கைகளைச் சோதனை முறையில் ... மேலும் பார்க்க

TVK: "ஜெய்பீம் படம் பார்த்து அழுத முதல்வர் உண்மையைப் பார்த்தும் அழவில்லையே" - ஆதவ் அர்ஜுனா

சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித்குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.தவெக ஆர்ப்பாட்டம்இந்... மேலும் பார்க்க

Vijay: "விளம்பர அரசு Sorryம்மா அரசாக மாறிவிட்டது" - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய்

சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் த... மேலும் பார்க்க

பாஜக: "தமிழகம் வர அமித்ஷா விமானம் ஏறினாலே திமுக-விற்கு நடுக்கம் ஏற்படுகிறது" - நயினார் நாகேந்திரன்

மதுரை எப்போதும் திமுகவிற்கு ராசியில்லாதது, எங்களுக்கு ராசியானது, தமிழகத்தில் மீனாட்சியம்மன் ஆட்சியை உருவாக்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.மதுரை மாநகராட்சியில் நடைபெற... மேலும் பார்க்க