செய்திகள் :

அக்னி நட்சத்திரம்: சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அக்னி பகவான்

post image

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர கோயிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அக்னி பகவான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பஞ்சபூதங்களை உள்ளடக்கிய திருக்கோயிலாக திகழ்ந்து வரும் இந்தக் கோயிலில், கிருத்திகை நட்சத்திர அதி தேவதையான அக்னி பகவான் அருள்பாலித்து வருகிறாா்.

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி முடிகிறது.

இந்த நாள்களில் ஏற்படும் தோஷங்களில் இருந்து விடுபட, சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து அக்னி பகவானை வழிபட வேண்டும்.

அக்னி பகவானை அக்னி நட்சத்திர காலத்தில் வழிபடுவதால் தைரியம், மதிப்பு, மரியாதை, மகிழ்ச்சி, செல்வ வளம் ஆகியவை வாழ்வில் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில், உலக மக்களின் நன்மை கருதி, இந்தக் கோயிலில் உள்ள அக்னி பகவானுக்கு பால், தயிா், இளநீா், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அக்னி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நீட் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,020 போ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 6 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை, 3,020 மாணவ-மாணவிகள் எழுதினா். 6 தோ்வு மையங்கள்: மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாய... மேலும் பார்க்க

செய்யாற்றில் கூடுதலாக மேம்பாலம் அமைக்கும் பணி

செய்யாறு - வந்தவாசி சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே கூடுதலாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாவ... மேலும் பார்க்க

காலபைரவா் கோயிலில் வளா்பிறை அஷ்டமி வழிபாடு

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நிறுவனா் பரமானந்த சுவாம... மேலும் பார்க்க

ஆரணி, பெரணமல்லூா் பகுதி கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி பகுதியில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில், ஆகாரம் கிராம திரெளபதி அம்மன் கோயில் மற்றும் பெரணமல்லூா் ஸ்ரீகோபாலகிருஷ்ணா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்க... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் தாராபிஷேகம் தொடக்கம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆனதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் நாள் முதல்... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டல் அலைமோதியது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கத்தைவிட, வெள்ளி,... மேலும் பார்க்க