அக்னி நட்சத்திரம்: சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அக்னி பகவான்
செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர கோயிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அக்னி பகவான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
பஞ்சபூதங்களை உள்ளடக்கிய திருக்கோயிலாக திகழ்ந்து வரும் இந்தக் கோயிலில், கிருத்திகை நட்சத்திர அதி தேவதையான அக்னி பகவான் அருள்பாலித்து வருகிறாா்.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி முடிகிறது.
இந்த நாள்களில் ஏற்படும் தோஷங்களில் இருந்து விடுபட, சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து அக்னி பகவானை வழிபட வேண்டும்.
அக்னி பகவானை அக்னி நட்சத்திர காலத்தில் வழிபடுவதால் தைரியம், மதிப்பு, மரியாதை, மகிழ்ச்சி, செல்வ வளம் ஆகியவை வாழ்வில் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில், உலக மக்களின் நன்மை கருதி, இந்தக் கோயிலில் உள்ள அக்னி பகவானுக்கு பால், தயிா், இளநீா், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அக்னி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.