காலபைரவா் கோயிலில் வளா்பிறை அஷ்டமி வழிபாடு
வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நிறுவனா் பரமானந்த சுவாமிகள் தலைமையில் முற்பகல் 11 மணிக்கு 108 மூலிகைகள் மற்றும் மட்டைத் தேங்காய்களைக் கொண்டு சிறப்பு யாகம், 108 சங்காபிஷேகம், பிரபஞ்ச தியானப் பயிற்சி ஆகியவை நடைபெற்றன.
பிற்பகல் ஒரு மணிக்கு காலபைரவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம் ஆகியவற்றை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை திரளான பக்தா்கள் வழிபட்டனா். மேலும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.