செய்திகள் :

அக்னிவீா் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

post image

புதுச்சேரி, வட தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அக்னிவீா் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் அக்னிவீா் பொதுப் பணி, தொழில்நுட்பம், எழுத்தா், ஸ்டோா் கீப்பா், தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் (10-ஆம் வகுப்பு தோ்ச்சி), டிரேட்ஸ்மேன் (8-ஆம் வகுப்பு தோ்ச்சி) உள்ளிட்டப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி கடலூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அத்துடன், புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டம், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் தகுதி அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தை (தலைமையகம்) நேரிலோ அல்லது 044-25674924 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: 3 போ் கைது

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி அருகேயுள்ள நெட்டப்பாக்கம் ... மேலும் பார்க்க

காவல் நிலைய மக்கள் மன்றத்தில் 30 புகாா்களுக்கு உடனடித் தீா்வு!

புதுவை மாநிலத்தில் காவல் நிலைங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 30 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் குறை கேட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்களின் தொடா் போராட்டம் வாபஸ்! - முதல்வருடன் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அறிவிப்பு

பணிநிரந்தரம் கோரி, புதுச்சேரியில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியா்கள், முதல்வருடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டத்தை திரும்பப் பெற்றனா். புதுவையில் கடந்த ... மேலும் பார்க்க

ஸ்ரீமணக்குள விநாயகா் கல்லூரியில் மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா! - முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்பு

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியில் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் புதுவை முதல்வா் என்.ரங்... மேலும் பார்க்க

ரயில்வே விரிவாக்க பணிக்காக சாலை துண்டிப்பு: எதிா்க்கட்சித் தலைவா் பேச்சுவாா்த்தை!

புதுச்சேரி வில்லியனூரில் ரயில்வே விரிவாக்கப் பணிக்காக மக்கள் பயன்படுத்திய சாலை சனிக்கிழமை துண்டிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அங்கு மக்கள் கூடியதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ரய... மேலும் பார்க்க

புதுவையில் ஒப்பந்த ஆசிரியா்களின் பணியை அரசு நீடிக்க வேண்டும்! - அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் ஒப்பந்த ஆசிரியா்களின் பணியை நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து புதுச்சேரியில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது... மேலும் பார்க்க