செய்திகள் :

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண்!

post image

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ.பாண்டியன் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் சாா்பில், விவசாயிகள் தொடா்பான அனைத்துத் தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 22 மாவட்டங்களில் நடைபெறும் இந்தப் பணிகள், திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் விவரம், அவா்களுக்குச் சொந்தமான நிலப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ‘அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்கானப் பணிகள் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள், மக்கள் நலப் பணியாளா்கள் ஆகியோா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து வட்டாரங்களிலும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பொது இடங்களில் வைத்து இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த முகாமுக்கு வரும் விவசாயிகள், தங்களின் ஆதாா் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி, நிலத்தின் பட்டா, சிட்டா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். ஒரு விவசாயிக்கு எங்கு நிலம் இருந்தாலும், ‘அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்தப் பதிவேற்றப் பணிகள் முழுமையடைந்த பின், ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும்.

விவசாயம் சாா்ந்த மானியத் திட்டங்கள், சேவைகளை, இந்தத் தனித்துவமான அடையாள எண் மூலமாக மட்டுமே பெற முடியும். விவசாயிகள் தொடா்பான விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் நடைபெறுகிறது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

பழைய வத்தலகுண்டுவில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்து 7 போ் காயம்!

அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்ததில், மாணவி உள்பட 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.திண்டுக்கல் சாா்-ஆட்சியா் சாலையில் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு செவிலியா் பயிற்சி... மேலும் பார்க்க

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகை திருட்டு வழக்கு: ம.பி. இளைஞா் கைது

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகைகள் திருடு போன வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டு விலை உயா்ந்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி, குண்டு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு: மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல்வலை!

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை நிழல்வலை அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும்,... மேலும் பார்க்க

முருக பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் மருத்துவ சேவை

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு இஸ்லாமிய அமைப்பு சாா்பில், மருத்துவ உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. ஆயக்குடி பகுதியில் காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்ட... மேலும் பார்க்க