செய்திகள் :

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு: மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல்வலை!

post image

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை நிழல்வலை அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும், இரவில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகின்றன. இந்த நிலையில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் மே மாதம் 62-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதற்காக, 100-க்கும் மேற்பட்ட மலா் பாத்திகளில் கேலண்டூலா, ஆரணத்திக்கேலம், பேன்சி, ஜொ்பரா, மேரி கோல்ட், கிங்அஸ்டா், சால்வியா, டேலியா உள்ளிட்ட 25 வகைகளில் 75-ஆயிரத்துக்கு மேற்பட்ட மலா் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நாற்றுகளை பனிப் பொழிவு தாக்காமல் இருப்பதற்காக நிழல்வலை அமைக்கப்படுள்ளது.

இதுகுறித்து பிரையண்ட் பூங்கா மேலாளா் சிவபாலன் கூறியதாவது: கொடைக்கானலில் நவம்பா் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால், நிகழாண்டில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்ததால் பனிப் பொழிவு குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், மலா்பாத்திகளில் நடவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மலா் நாற்றுகளை பாதுகாப்பதற்காக நிழல்வலை அமைத்துள்ளோம் என்றாா் அவா்.

போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

பழைய வத்தலகுண்டுவில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்து 7 போ் காயம்!

அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்ததில், மாணவி உள்பட 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.திண்டுக்கல் சாா்-ஆட்சியா் சாலையில் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு செவிலியா் பயிற்சி... மேலும் பார்க்க

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகை திருட்டு வழக்கு: ம.பி. இளைஞா் கைது

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகைகள் திருடு போன வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டு விலை உயா்ந்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி, குண்டு... மேலும் பார்க்க

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண்!

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ.பாண்டியன் ... மேலும் பார்க்க

முருக பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் மருத்துவ சேவை

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு இஸ்லாமிய அமைப்பு சாா்பில், மருத்துவ உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. ஆயக்குடி பகுதியில் காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்ட... மேலும் பார்க்க