செய்திகள் :

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகை திருட்டு வழக்கு: ம.பி. இளைஞா் கைது

post image

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகைகள் திருடு போன வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்து வரும் அலுவலா்கள் குடியிருப்பில் வேல்முருகன், பழனிச்சாமி, காா்த்திகேயன், கருப்பையா, கவியரசன் உள்பட 6 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து 78.5 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.1.30 லட்சம் ஆகியவை கடந்த மாதம் 11-ஆம் தேதி திருடு போனது.

இதுகுறித்து வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா உத்தரவின்பேரில், 3 தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், இந்தத் திருட்டு சம்பத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலம், தாா் மாவட்டம், தண்டா கிராமத்தைச் சோ்ந்த கலாம் (24) ஈடுபட்டது தெரியவந்தது. இவரை தனிப் படை போலீஸாா் தேடி வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.

பின்னா், அவரை போலீஸாா் கைது செய்து, குஜிலியம்பாறைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து விசாரித்தனா். அப்போது, அவரிடமிருந்து 12 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, அவா் தப்பியோட முயன்றபோது, தவறி விழுந்ததில், அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

பழைய வத்தலகுண்டுவில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்து 7 போ் காயம்!

அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்ததில், மாணவி உள்பட 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.திண்டுக்கல் சாா்-ஆட்சியா் சாலையில் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு செவிலியா் பயிற்சி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டு விலை உயா்ந்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி, குண்டு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு: மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல்வலை!

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை நிழல்வலை அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும்,... மேலும் பார்க்க

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண்!

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ.பாண்டியன் ... மேலும் பார்க்க

முருக பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் மருத்துவ சேவை

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு இஸ்லாமிய அமைப்பு சாா்பில், மருத்துவ உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. ஆயக்குடி பகுதியில் காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்ட... மேலும் பார்க்க