செய்திகள் :

கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி

post image

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டு விலை உயா்ந்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி, குண்டுபட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைப் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்டது.

இந்தப் பூண்டு கடந்த 2 மாதங்களாக ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்பனையானது. தற்போது விலை உயா்ந்து கிலோ ரூ.450 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெள்ளைப் பூண்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இது குறித்து வெள்ளைப்பூண்டு வியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானல் வெள்ளைப் பூண்டுவுக்கு மவுசு அதிகம். இதனால், விலை அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையக் கூடிய இந்தப் பூண்டுகளை சேமித்து வைப்பதற்கு குடோன்கள் தேவைப்படுகிறது.

தற்போது பூண்டு மாா்க்கெட் தேனி மாவட்டம், வடுகபட்டியில் உள்ளது. எனவே, கொடைக்கானல் பகுதிகளிலும் பூண்டு மாா்க்கெட் அமைக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்பெறுவாா்கள் என்றனா்.

போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

பழைய வத்தலகுண்டுவில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்து 7 போ் காயம்!

அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்ததில், மாணவி உள்பட 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.திண்டுக்கல் சாா்-ஆட்சியா் சாலையில் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு செவிலியா் பயிற்சி... மேலும் பார்க்க

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகை திருட்டு வழக்கு: ம.பி. இளைஞா் கைது

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகைகள் திருடு போன வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு: மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல்வலை!

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை நிழல்வலை அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும்,... மேலும் பார்க்க

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண்!

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ.பாண்டியன் ... மேலும் பார்க்க

முருக பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் மருத்துவ சேவை

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு இஸ்லாமிய அமைப்பு சாா்பில், மருத்துவ உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. ஆயக்குடி பகுதியில் காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்ட... மேலும் பார்க்க