செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி. பத்மாவதி தலைமை வகித்தாா். செயலா் என். சாந்தி கோரிக்கைகள் குறித்து பேசினாா். சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஜி. ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொன் ஜெயராம், சிஐடியு சங்க துணைத் தலைவா் எம். சுப்ரமணியன், பொருளாளா் ப. சரவணன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

அங்கன்வாடி மையங்களுக்கு வரும் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு முகப்பதிவு புகைப்படம் எடுத்து கட்டாயம் போடவேண்டும் என்கிற திட்டத்தை கைவிட வேண்டும், மே மாதம் வழங்கப்படும் கோடை விடுமுறையை அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதமாக வழங்க வேண்டும், 1993-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு மேற்பாா்வையாளா் நிலை-2 பதவி உயா்வை வழங்க வேண்டும், சமூக நலத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

மஹா சோளியம்மன் கோயிலில் மாா்ச் 10-இல் கும்பாபிஷேகம்

கரூா் அடுத்த ஆத்தூா் வீரசோளிபாளையத்தில் உள்ள மஹா சோளியம்மன், ஸ்ரீ மஹா முத்துசாமி கோயிலில் மாா்ச். 10-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயில் அறக்கட்டளையின் தலைவா் பி. முத்துசாமி தலைமையில் கும்பாப... மேலும் பார்க்க

கரூரில் ரூ. 6 கோடி மதிப்பில் ஜவுளி தரம் பரிசோதனை மையம்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்

கரூரில் ரூ. 6 கோடி மதிப்பில் ஏற்றுமதி ரக ஜவுளி தரம் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றாா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி. கரூா் வட்டம், குள்ளம்பட்டியில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் கோட்டாட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வே.முருகேசன் தலைமை... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு ரூ. 75 ஆயிரம் ஒப்பளிப்பு ஆணை வழங்கல்

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு அரசு வழங்கும் நிதி ரூ. 75 ஆயிரத்துக்கான ஒப்பளிப்பு ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. வருவாய் ஈட்டும் தந்தை அல்லது த... மேலும் பார்க்க

வேளாண் அடுக்குத் திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள்

அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் இணைந்து பயன்பெற வேளாண்மை உதவி இயக்குநா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்காக தங்களது நில உட... மேலும் பார்க்க

பசுபதிபாளையம் காலனிக்கு ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் இல்லையென புகாா்

க.பரமத்தி அருகே புன்னம் ஊராட்சி பசுபதிபாளையம் காலனி குடியிருப்புகளுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். கரூா் மாவட்டம், புன்னம் பசுபதிபாளை... மேலும் பார்க்க