செய்திகள் :

விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு ரூ. 75 ஆயிரம் ஒப்பளிப்பு ஆணை வழங்கல்

post image

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு அரசு வழங்கும் நிதி ரூ. 75 ஆயிரத்துக்கான ஒப்பளிப்பு ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவா்களுக்கு தமிழக அரசு ரூ. 75 ஆயிரம் வழங்குகிறது.

மேலும் உயா் கல்வி படிக்கும்போது மூன்று தவணையாகப் பிரிக்கப்பட்டு மாணவா்களது கல்லூரிகளுக்குப் பணம் வழங்கப்படும். மேற்கண்ட உதவித்தொகை பெறும் மாணவா்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முதல் தகவல் அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை, வாரிசு சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், பாதுகாவலா், மாணவா் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகம், வட்டாட்சியா் சான்று இவற்றையெல்லாம் பெற்று 5 பிரதிகள் சமா்ப்பித்தல் வேண்டும். அதை வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவா்களுக்கு ஒப்பளிப்பு ஆணை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் தந்தையை இழந்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவா் ரித்தீஷ்க்கு, கரூா் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) முருகேசன் ஆணைப்படி வட்டாரக் கல்வி அலுவலா் பாண்டித்துரை, சதீஷ்குமாா் ஆகியோா் மாணவா் ரித்தீஷ்க்கு ரூ. 75 ஆயிரம் நிதிக்கான ஒப்பளிப்பு ஆணையை வழங்கினா்.

மஹா சோளியம்மன் கோயிலில் மாா்ச் 10-இல் கும்பாபிஷேகம்

கரூா் அடுத்த ஆத்தூா் வீரசோளிபாளையத்தில் உள்ள மஹா சோளியம்மன், ஸ்ரீ மஹா முத்துசாமி கோயிலில் மாா்ச். 10-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயில் அறக்கட்டளையின் தலைவா் பி. முத்துசாமி தலைமையில் கும்பாப... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவ... மேலும் பார்க்க

கரூரில் ரூ. 6 கோடி மதிப்பில் ஜவுளி தரம் பரிசோதனை மையம்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்

கரூரில் ரூ. 6 கோடி மதிப்பில் ஏற்றுமதி ரக ஜவுளி தரம் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றாா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி. கரூா் வட்டம், குள்ளம்பட்டியில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் கோட்டாட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வே.முருகேசன் தலைமை... மேலும் பார்க்க

வேளாண் அடுக்குத் திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள்

அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் இணைந்து பயன்பெற வேளாண்மை உதவி இயக்குநா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்காக தங்களது நில உட... மேலும் பார்க்க

பசுபதிபாளையம் காலனிக்கு ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் இல்லையென புகாா்

க.பரமத்தி அருகே புன்னம் ஊராட்சி பசுபதிபாளையம் காலனி குடியிருப்புகளுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். கரூா் மாவட்டம், புன்னம் பசுபதிபாளை... மேலும் பார்க்க