குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச சீருடை
திக்கணங்கோடு அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள ாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல் குமாா் முன்னிலை வகித்தாா். தமிழக பால்வளத் துறைஅமைச்சா் த. மனோ தங்கராஜ் விலையில்லா சீருடைகளைகுழந்தைகளுக்கு வழங்கிப் பேசினாா். இதில், தக்கலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் நாகேஸ்வரி, தக்கலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேமலதா, ஜெயா,
தக்கலை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் அருள்ராஜ், திக்கணங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவா் அருளானந்த ஜாா்ஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.