செய்திகள் :

அங்கன்வாடி மையங்கள் நவீனப்படுத்த நடவடிக்கை: அமைச்சா் பெ. கீதா ஜீவன் தகவல்

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நவீனப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன்.

தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில், குழந்தைத் திருமணம் தொடா்பாக கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோா் இடை யே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு 18 வயது முடிவடைந்த பின்னா் திருமணம் செய்து கொண்டால்தான் குழந்தை பிறப்பதற்கு ஏற்ற அளவில் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கா்ப்பிணியாக உள்ள பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய மையங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில்கூட 34 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமாா் 6,500 அங்கன் வாடி மையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

தொடா்ந்து, அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நவீனப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.

மேலும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், எல்இடி திரை , விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது என்றாா் அவா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க