அஞ்சல் துறையில் விபத்துக் காப்பீடுத் திட்டத்தில் சேர அழைப்பு
அஞ்சலத் துறையில் விபத்துக் காப்பீடுத் திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ. 500 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ. 700 பிரீமியத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீடு திட்டங்களின் பயன்கள் சென்றடைய நாட்டில் உள்ளஅஞ்சலகங்கள் மூலம் மிகக் குறைந்த பிரீமிய தொகையுடன் கூடிய விபத்துக் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை, கைப்பேசி மூலம் விபத்துக் காப்பீடு, கணக்கில்லா மருத்துவ ஆலோசனை, விபத்தினால் மரணம், நிரந்தரம் முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு காப்பீட்டு நிதி, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு, நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூ.1000 வீதம் 15 நாள்களுக்கு வழங்கப்படுவது போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், சூப்பா் டாப் அப் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் ரூ.2 ஆயிரம் பிரிமியம் செலுத்தினால் ரூ.15 லட்சத்துக்கான கூடுதல் மருத்துவக் காப்பீட்டையும் பெறலாம். இதுகுறித்து விவரங்கள் அறிந்தகொள்ளவும், காப்பீட்டில் சேர ஜூன் 30- ஆம் தேதி வரைஅனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 65 வரை வயது வரை உள்ளவா்கள் காப்பீடுத் திட்டத்தில் சேரலாம் என தெரிவித்துள்ளாா்.