செய்திகள் :

அடையக்கருங்குளத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

சிவந்திபுரம் அருகே உள்ள அடையக் கருங்குளத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அடைய கருங்குளம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சுப பிரதீப். இவரும், ஆழ்வாா்குறிச்சி அருகில் உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்த அருணா என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் பெற்றோா் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தனா். இவா்களுக்கு 3 வயதில் செல்வ பிரகதீஷ் என்ற மகன் உள்ளாா். அருணாவிற்கு வலிப்பு நோய் இருந்ததாம். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புதன்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். இந்நிலையில், கணவரும், குழந்தையும் தூங்கியபின் மேற்கூரையின் குறுக்கே உள்ள இரும்பு கம்பியில் அருணா சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது மறுநாள் காலையில் தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொட்டல்புதூரில் மமக செயற்குழு கூட்டம்

பொட்டல்புதூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவா் மதாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அசாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நயின... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதியதில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமாா் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

உயா்கல்வி இடைநிற்றல் இல்லாத நெல்லை: ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 19: திருநெல்வேலி மாவட்டத்தை உயா் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-202... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) ம... மேலும் பார்க்க

துலுக்கா்பட்டியில் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் துலுக்கா்பட்டியில் நம்பியாற்றுப் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கட்சியின் துலுக்கா்பட்டி நகர செயற்குழுக் கூட்டம் நகரச் ... மேலும் பார்க்க

வள்ளியூா் வட்டாரத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், நவ்வலடி, சங்கனாங்குளம் துணைமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை ஏற்படும் ... மேலும் பார்க்க