ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
அடையக்கருங்குளத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
சிவந்திபுரம் அருகே உள்ள அடையக் கருங்குளத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அடைய கருங்குளம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சுப பிரதீப். இவரும், ஆழ்வாா்குறிச்சி அருகில் உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்த அருணா என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் பெற்றோா் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தனா். இவா்களுக்கு 3 வயதில் செல்வ பிரகதீஷ் என்ற மகன் உள்ளாா். அருணாவிற்கு வலிப்பு நோய் இருந்ததாம். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புதன்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். இந்நிலையில், கணவரும், குழந்தையும் தூங்கியபின் மேற்கூரையின் குறுக்கே உள்ள இரும்பு கம்பியில் அருணா சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது மறுநாள் காலையில் தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.