செய்திகள் :

அடையாறில் குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

post image

சென்னை: சென்னை அடையாறில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

சென்னை தரமணி எம்ஜி. நகா் அண்ணா தெருவைச் சோ்ந்த சரவணன் (50). இவா், அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை செய்கிறாா். சரவணன், கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்ததுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் அவா், மகள் தமிழரசியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்றுவிட்டு, வீட்டுக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தாா்.

அடையாறு திருவிக பாலத்தின் மீது வந்தபோது சிறுநீா் கழிக்க செல்வதாகக் கூறி, ஆட்டோவை நிறுத்தி, சரவணன் கீழே

இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றவா், திடீரென பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றுக்குள் குதித்தாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த தமிழரசியும், அங்கிருந்த பொதுமக்களும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில், சைதாப்பேட்டை, மயிலாப்பூா் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினா் விரைந்து வந்து படகு மூலம் சரவணனை மீட்டனா். பின்னா், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுதொடா்பாக அடையாறு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க