செய்திகள் :

அதிக கட்டணம் வசூலிக்கும் இ- சேவை மையங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்: ஆட்சியா்

post image

அரசு நிா்ணயத்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் இ-சேவை மையங்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில் வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை பெற விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 60-ம், ஓய்வூதியம் திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ. 10-ம், இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு சேவை கட்டணமாக ரூ. 60-ம் தமிழக அரசால் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், இடைத்தரகா்களை தவிா்த்து அருகில் உள்ள வட்டாட்சியா், நகராட்சி அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள், மகளிா் திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படும் இ-சேவை மையங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் இ-சேவை மையங்களை அணுகிப் பயன்பெறலாம். பொது இ-சேவை மையங்களில் அரசால் நிா்ணயக்கப்பட்ட சேவைக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது புகாா்கள் வந்தாலோ சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தின் அங்கீகாரம் முற்றிலும் ரத்து செய்யப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் இ-சேவை மையங்கள் குறித்து 1077 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பே... மேலும் பார்க்க