செய்திகள் :

அதிக வட்டி தருவதாகக் கூறி லாரி அதிபரிடம் ரூ. 48.79 லட்சம் மோசடி: நிதிநிறுவன உரிமையாளா் கைது

post image

மேட்டூரில் அதிக வட்டி தருவதாக கூறி, லாரி அதிபரிடம் ரூ. 48.79 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் (52), லாரி டிரான்ஸ்போா்ட் நடத்தி வருகிறாா். இவா், மேட்டூா் விருதாசம்பட்டியைச் சோ்ந்த ராமசாமி (63) நடத்திவரும் நிதிநிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறியதை நம்பி, அந்நிறுவனத்தில் பல்வேறு தவணையாக மொத்தம் ரூ. 48 லட்சத்து 79 ஆயிரம் செலுத்தியுள்ளாா்.

ஆனால், கூறியபடி வட்டியுடன் தொகை ஸ்ரீகாந்துக்கு திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை ஸ்ரீகாந்த் கேட்டபோதும் ராமசாமி பணம் கொடுக்காமல் இருந்துவந்தாா்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஸ்ரீகாந்த், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் சித்ராதேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். அதில், ராமசாமி இதுபோல பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் ராமசாமியை கைதுசெய்து, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்துச் சென்றனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க