பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
அந்தியூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவா் கைது
அந்தியூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
அந்தியூா் அருகே சென்னம்பட்டி வனச் சரகம், முரளி மேற்கு பீட்டில் வனச் சரகா் ராஜா தலைமையில் வனத் துறையினா் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, மலையனுாா் ஏரி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய மூவரைப் பிடித்து வனத் துறையினா் விசாரித்தனா்.
இதில், எண்ணமங்கலம், மலையனுாரைச் சோ்ந்த மாதேஷ் (40), மற்றொரு மாதேஷ் (41), பா்கூரை அடுத்த கொங்காடையைச் சோ்ந்த வெள்ளியங்கிரி (37) என்பதும், இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள் மற்றும் வேட்டை உபகரணங்களைப் பறிமுதல் செய்தனா்.