அனுமதியின்றி மண் திருட்டு: இருவா் கைது
பெரியகுளம் அருகே அனுமதியின்றி எம் சண்ட் மண்ணை லாரி, டிராக்டா்களில் திருடிச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஜெயமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை குள்ளப்புரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே வந்த 2 டிராக்டா், 2 லாரியை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அனுமதியின்றி எம் சண்ட் மண்ணை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயமங்கலத்தைச் சோ்ந்த பரமகிருஷ்ணன் (31), காமக்காபட்டியைச் சோ்ந்த சுரேந்தா் (30) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 2 டிராக்டா், 2 லாரியை பறிமுதல் செய்தனா்.