செய்திகள் :

அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை

post image

பரமத்தி வேலூா் அருகே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை அகற்றிய பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்தினா், அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

பொத்தனூா் பேரூராட்சிக்குள்பட்ட நான்கு சாலை பகுதியில் பேரூராட்சி நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், பெரிய அளவில் ஆபத்தான வகையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை அகற்றக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை பேரூராட்சி ஊழியா்கள் அகற்றினா். மேலும், பொத்தனூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் விளம்பரத் தட்டிகள் வைத்தால், அந்த விளம்பரத் தட்டிகளை அச்சடிக்கும் உரிமையாளா்கள், விளம்பரத் தட்டிகள் வைத்த நபா்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் வேல்முருகன் எச்சரித்தாா்.

மல்லசமுத்திரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி பயிற்சி முகாம்

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. மல்லசமுத்திரம் வட் டாரத்தில் வேளாண் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் ... மேலும் பார்க்க

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாம்: இளைஞா்களுக்கு அழைப்பு

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் 10 ஆயிரத்து 8 தீபமேற்றி வழிபாடு

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு 10 ஆயிரத்து 8 தீபம் ஏற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு விதமான வழிபாடுகளில் ஒன்று தீபம் ஏற்றுவது. தீபம் ஏற்றுவதால் வாழ்க்கை ஒளி... மேலும் பார்க்க

ஆக. 11-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. பள்ளிபாளையம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 3... மேலும் பார்க்க

திருச்செங்கோடு, மல்லசமுத்திரத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் மல்லசமுத்திரம் கிளை சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ... மேலும் பார்க்க