‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாம்: இளைஞா்களுக்கு அழைப்பு
‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படைக்கு ‘அக்னிவீரா்’ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான ஆள்சோ்ப்பு முகாம், சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் செப். 2-ஆம் தேதி முதல் ஆண்களுக்கும், 5-ஆம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது.
50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியில் ஏதேனும் ஒரு பிரிவு மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2026- ஜன. 1-ஆம் தேதியின்படி பதினேழரை வயதுக்குமேல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த தகுதி மற்றும் விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இணையதளம் வாயிலாக அறியலாம். தகுதியுள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.