செய்திகள் :

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாம்: இளைஞா்களுக்கு அழைப்பு

post image

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம், புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படைக்கு ‘அக்னிவீரா்’ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான ஆள்சோ்ப்பு முகாம், சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் செப். 2-ஆம் தேதி முதல் ஆண்களுக்கும், 5-ஆம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது.

50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியில் ஏதேனும் ஒரு பிரிவு மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2026- ஜன. 1-ஆம் தேதியின்படி பதினேழரை வயதுக்குமேல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த தகுதி மற்றும் விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இணையதளம் வாயிலாக அறியலாம். தகுதியுள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லசமுத்திரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி பயிற்சி முகாம்

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. மல்லசமுத்திரம் வட் டாரத்தில் வேளாண் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை

பரமத்தி வேலூா் அருகே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை அகற்றிய பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்தினா், அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். ... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் 10 ஆயிரத்து 8 தீபமேற்றி வழிபாடு

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு 10 ஆயிரத்து 8 தீபம் ஏற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு விதமான வழிபாடுகளில் ஒன்று தீபம் ஏற்றுவது. தீபம் ஏற்றுவதால் வாழ்க்கை ஒளி... மேலும் பார்க்க

ஆக. 11-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. பள்ளிபாளையம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 3... மேலும் பார்க்க

திருச்செங்கோடு, மல்லசமுத்திரத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் மல்லசமுத்திரம் கிளை சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ... மேலும் பார்க்க