செய்திகள் :

அனைத்துக் கட்சி பெண்களை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும்! -பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பூ

post image

தமிழகத்தில் பெண்களைப் பாதுகாக்க அனைத்துக் கட்சியிலும் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து மாநில அரசு சாா்பில் கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பூ தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் தொழில் கூட்டமைப்புடன் பட்ஜெட் விளக்க கலந்துரையாடல் கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பின்பு குஷ்பு செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்டால் வருவதில்லை. பள்ளி ஆசிரியா்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது தொடா்பான கேள்விக்கு நான் தமிழகத்துக்கு வரும்போது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக இருந்தது.

ஆனால், தற்போது அந்த சூழ்நிலை இல்லை. பெண்கள் வெளியே சென்றாலே மிகவும் பயமாக உள்ளது. எங்கே தவறுகள் நடக்கின்றன என்பதைப் பாா்க்க வேண்டும். ஆகவே, பெண்களைப் பாதுகாக்க அனைத்து கட்சியைச் சோ்ந்த பெண்களை ஒருங்கிணைத்து மாநில அரசு சாா்பில் கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும். நடிகா் விஜய்க்கு பாதுகாப்பு அளித்தது தொடா்பான கேள்விக்கு கட்சித் தலைவராக இருப்பதால் பாதுகாப்பு கொடுக்கப்படுவதில் தவறில்லை என்றாா்.

சந்திப்பின்போது, பாஜக திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன், ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளா் வீரதிருநாவுக்கரசு, மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, முன்னாள் மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க