செய்திகள் :

‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ பிரசார இயக்கம்! ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கி வைத்தாா்

post image

சென்னை ஆளுநா் மாளிகையில் ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ பிரசார இயக்கத்தை ஆளுநா் ஆா். என். ரவி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிண்டி ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ரவி மற்றும் அவது மனைவி லக்ஷ்மி ரவி, இயற்கை வேளாண்மை முன்னோடிகள் மற்றும் தலைவா்கள், வேளாண் தொழில்முனைவோருடன் சோ்ந்து, ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ பிரசார இயக்கத்தின் கீழ், 27 மரக் கன்றுகள் ஒவ்வொன்றையும் ஒரு நட்சத்திரத்தைக் குறிக்கும் வகையில் நட்டனா்.

இது அன்னை பூமி மீதான நமது ஆழமான பாரம்பரிய பிணைப்பையும் மரியாதையையும் கொண்டாடுகிறது என பதிவிட்டுள்ளாா் ஆளுநா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் இந்தத் திட்டத்தை பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

9 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 9 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம்... மேலும் பார்க்க

17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 9), ஜூன் 12-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள... மேலும் பார்க்க

தடுப்புக் காவல் அதிகாரம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தடுப்புக் காவல் என்பது அரசின் தனிச்சிறப்புடைய அதிகாரம்; அதை மிகவும் அரிதான தருணங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கேரளத்தில் வட்டித் தொழில் செய்யும் ஒருவா் 4 ... மேலும் பார்க்க

தமிழக முதல்வரைக் கண்டு மத்திய அரசுக்கு பதற்றம்! - அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழக முதல்வரை கண்டு மத்திய அரசு பதற்றத்தில் உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை சூளை அகண்ட தண்டு மாரியம்மன் திருக்கோயில குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் பங்... மேலும் பார்க்க

விருதுநகா் வெடிவிபத்து: உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு!

விருதுநகா் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகா் மாவட்டம், மெட்டுக... மேலும் பார்க்க

குகேஷுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு!

நாா்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் 3-ஆவது இடத்தைப் பிடித்த தமிழகத்தைச் சோ்ந்த குகேஷுக்கு தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளாா் இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாா்வேயில் அண்மைய... மேலும் பார்க்க