செய்திகள் :

"அமித் ஷா உட்பட 3 பேரை டெல்லியில் சந்தித்தேன்" - தமிழகம் திரும்பிய செங்கோட்டையன் என்ன சொல்கிறார்?

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனுக்கும் பல மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது.

இவ்வாறிருக்க, அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு செப்டம்பர் 5-ம் தேதி செங்கோட்டையன் கெடு விதித்தார்.

அடுத்த நாளே, அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இதற்கு எதிர்வினையாற்றிய செங்கோட்டையன், தன்னைக் கேட்காமல் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கான விளைவு போகப் போகத் தெரியும் என்றார்.

அதோடு, "பா.ஜ.க தலைவர்கள் யாரையும் சந்திக்க புதுடெல்லி செல்லவில்லை" என நேற்று கோவை விமான நிலையத்திலிருந்து ஹரித்வார் புறப்பட்டார்.

ஆனால், அவர் கிளம்பும்போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத்தான் சந்திக்கச் செல்கிறார் எனப் பேச்சு அடிபட்டது.

அதற்கேற்றாற்போல, டெல்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்து சுமார் அரை மணிநேரம் செங்கோட்டையன் பேசியதாக டெல்லி அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பரவின.

இந்த நிலையில், இன்று பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தடைந்த செங்கோட்டையன், தனது பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

அப்போது செங்கோட்டையன், "நேற்று ஹரித்வார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றிருந்தேன். நான் டெல்லி சென்றதும் உள்துறை அமைச்சரைச் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

அதன்மூலமாக, உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துக்கள் அங்கு பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை அவர்களிடத்தில் எடுத்துச் சொன்னேன்.

அந்தச் சந்திப்பின்போது ரயில்வே துறை அமைச்சரும் வந்தார். அவரிடம், ஈரோட்டிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்றினால் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறினேன்.

எனவே மக்கள் பணி செய்வதற்கும், இயக்கம் வலிமை பெறுவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

Nepal Violence: ரத்தம் வழிய அழுதபடி வந்த முன்னாள் பிரதமர்; மனைவி மீதும் தாக்குதல் - என்ன நடந்தது?

நேபாளம் நாட்டில் ஊழல், பொருளாதார சமத்துவமின்மை, வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் ஷேர் பஹதூர் தியூபா மற்றும் அவரது மனைவி அர்சு ராணா தியூபா கடுமையாகத் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்: கீறல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டது- நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்ப... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் இணைய தயார்'- சொல்கிறார் டி.டி.வி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஜீயரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியா... மேலும் பார்க்க

Nepal: போராட்டக்காரர்கள் தீவைத்ததில் உயிரிழந்த முன்னாள் பிரதமரின் மனைவி - என்ன நடக்கிறது அங்கே?

நேபாளம் நாட்டில் நடந்துவந்த மாணவர் போராட்டம் இன்று பெரும் வன்முறையாக மாறியிருக்கிறது. அமைச்சர்களின் வீடுகள், பிரதமரின் வீடு, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டடம் என அரசு தொடர்பான பல இடங்களையும் ஊடக அலு... மேலும் பார்க்க

Vice President Election: தமிழகத்திலிருந்து 3-வது துணை ஜனாதிபதி; வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்!

துணை குடியரசு தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல் நலக்குறைவை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை குடியரசு தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று(... மேலும் பார்க்க

"காவல்துறை அனுமதிகொடுக்கவில்லை என 'சாக்கு' சொல்லக் கூடாது" - விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்!

இந்தியா டுடே பத்திரிகையின் நேர்காணலில், "அதிமுகவுக்கு அட்வைஸ் வழங்க மாட்டோம், அடுத்த கட்சி எப்படி செயல்பட வேண்டும் என வெளியில் இருந்து கூறுவது சரியானது அல்ல" என்று பேசிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அ... மேலும் பார்க்க