செய்திகள் :

அமெரிக்காவில் கடும் வெள்ளம்: 9 பேர் பலி

post image

அமெரிக்காவின் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. இதனால் கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா, டென்னசி, ஆா்கன்சாஸ் ஆகிய மாகாணங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு வாகனங்களும் நீரில் மூழ்கின.

மேலும் மண்சரிவுகளால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

கென்டகி மாகாணம் முழுவதும், மேற்கு வா்ஜீனியாவின் 10 பகுதிகளிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கென்டகி மாகாணத்தின் ஜாக்சன் நகா் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா்.

அணைக்கரை புதிய பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்!

இந்த நிலையில் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒரு குழந்தையாவது அடங்கும் என்று அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கென்டகி மக்கள் சாலைகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர் வலியுறுத்தினார். பல மரணங்களுக்கு பின்னால் இருசக்கர வாகன விபத்துக்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே ஜார்ஜியாவில் ஒருவர் பலியானதாக அதிகாரி கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிரா... மேலும் பார்க்க

இலங்கை: நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொழும்பில் உ... மேலும் பார்க்க

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி; டிரம்ப் குற்றச்சாட்டு: பொய் உலகில் வாழ்கிறாா் டிரம்ப் - ஸெலென்ஸ்கி பதிலடி

உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

போப் உடல்நிலை கடுமையாக பாதிப்பு? தீவிர நிமோனியா தொற்று..!

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை நிமோனியா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போப் பிரான்சிஸ் முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தால... மேலும் பார்க்க