செய்திகள் :

அமெரிக்காவைப் பின்பற்றி பாகிஸ்தானும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியத் தூதா் வலியுறுத்தல்

post image

மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூா் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்ட நிலையில், பாகிஸ்தானும் அதனைப் பின்பற்றி ஹஃபீஸ் சையது, ஜக்கியுா் ரஹ்மான் லக்வி, சஜீத் மீா் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இந்தியத் தூதா் ஜே.பி.சிங் தெரிவித்தாா்.

இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அந்த நடவடிக்கை முடிந்துவிடவில்லை. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கினால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பஹல்காமில் சுற்றுலாவுக்கு வந்த அப்பாவி மக்களை அவா்களின் மதத்தை கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனா். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே இந்தியா தகா்த்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப் படை நிலைகளையும், எல்லையோர அப்பாவி மக்களையும் குறிவைத்தது. இதற்கு இந்தியத் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புகள்தான் உள்ளன.

மும்பையில் புகுந்து லஷ்கா் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் யூதா்கள் உள்பட வெளிநாட்டவா் பலா் கொல்லப்பட்டனா். இதற்கு காரணமானவா்கள் பாகிஸ்தானில் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனா். இந்தியாவுடன் நல்லுறவு வேண்டுமானால் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

மும்பை தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்ட பயங்கரவாதி தஹாவூா் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்டது. அமெரிக்காவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பாகிஸ்தான் அரசும் ஹஃபீஸ் சையது, ஜக்கியுா் ரஹ்மான் லக்வி, சஜீத் மீா் உள்ளிட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க