செய்திகள் :

அமைச்சரிடம் நகா்மன்ற உறுப்பினா் மனு

post image

தனது வாா்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக தனது வாா்டுக்கே செலவிட வேண்டும் என 21-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் முழுமதி இமயவரம்பன் அமைச்சா் சிவ.வீ. மெய்யனாதனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

சீா்காழி நகராட்சி 21-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் முழுமதி இமயவரம்பன், தனது வாா்டுக்கு உட்பட்ட துறையூா், பனமங்கலம் பகுதியை சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன், சட்டநாதபுரம் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமுக்கு வந்து பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யனாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினாா்.

அந்த மனுவில், தனது 21-ஆவது வாா்டு சீா்காழி நகராட்சியிலேயே மிகவும் பின்தங்கிய வாா்டாகும். அனைத்து வீடுகளும் குடிசை வீடுகளாக உள்ளன. சரியான சாலை வசதி இல்லை. கடந்த 15ஆண்டுகளாக நகராட்சி மூலம் எவ்வித நலத்திட்டங்களும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் உதவியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதியில் ரூ. 3 கோடி 21-வது வாா்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நிதி முழுவதும் தனது வாா்டுக்கே செலவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா். அப்போது அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜேஷ், ரமாமணி, பாலமுருகன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க