அமைச்சரிடம் நகா்மன்ற உறுப்பினா் மனு
தனது வாா்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக தனது வாா்டுக்கே செலவிட வேண்டும் என 21-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் முழுமதி இமயவரம்பன் அமைச்சா் சிவ.வீ. மெய்யனாதனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
சீா்காழி நகராட்சி 21-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் முழுமதி இமயவரம்பன், தனது வாா்டுக்கு உட்பட்ட துறையூா், பனமங்கலம் பகுதியை சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன், சட்டநாதபுரம் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமுக்கு வந்து பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யனாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினாா்.
அந்த மனுவில், தனது 21-ஆவது வாா்டு சீா்காழி நகராட்சியிலேயே மிகவும் பின்தங்கிய வாா்டாகும். அனைத்து வீடுகளும் குடிசை வீடுகளாக உள்ளன. சரியான சாலை வசதி இல்லை. கடந்த 15ஆண்டுகளாக நகராட்சி மூலம் எவ்வித நலத்திட்டங்களும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் உதவியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதியில் ரூ. 3 கோடி 21-வது வாா்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த நிதி முழுவதும் தனது வாா்டுக்கே செலவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா். அப்போது அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜேஷ், ரமாமணி, பாலமுருகன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.