செய்திகள் :

அம்பை, கல்லிடை, கடையம் பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை

post image

ரமலானை முன்னிட்டு, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி,விக்கிரமசிங்கபுரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி கீழ தைக்கால் தெரு, ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் நூருல் ஹிதாயா மகளிா்அரபிக் கல்லூரி முதல்வா் மு. ரஹ்மத் ரபீக் சொற்பொழிவாற்றினாா்.

இமாம் சி. முகம்மதுஹசன் ரியாஜி, தொழுகையை நடத்தினாா். ஜமாத் தலைவா் அ. நாகூா் கனி, செயலா் அ. ஷேக்செய்யது அலி, பொருளாளா் என். அஜிஸ், துணைத் தலைவா் அ. நாகூா் மீரான் மற்றும் மடவிளாகம் தெரு, தைக்கால் தெரு, சத்திரம் தெரு, பட்டாரியா் தெரு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனா்.

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் அப்துல் மஜீத் தலைமையிலும்,கோல்டன் நகா் பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் மசூது தலைமையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

மேலும், தவ்ஹீத் ஜமாத் சாா்பில் கல்லிடைக்குறிச்சியில் மாவட்டச் செயலா் சுலைமான் தலைமையிலும், விக்கிரமசிங்கபுரத்தில் வழக்குரைஞா்ஷஃபி தலைமையிலும், அம்பாசமுத்திரத்தில் மாவட்டச் செயலா் ஜலில் தலைமையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கடையம் அருகே முதலியாா்பட்டி கிளை தவ்ஹித் ஜமாத் சாா்பில் காந்திநகா் 2ஆவதுதெருவில் நடைபெற்ற தொழுகையில் கிளைத் தலைவா் ஆல்பா செய்யது அலி தலைமையில்தென்காசி மாவட்டச் செயலா் ஜலாலுதீன் பெருநாள் உரையாற்றினாா்.

மேலும் அம்பாசமுத்திரம் மேலப் பள்ளிவாசல், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி,கடையம் பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கா.சு. பிள்ளை படத்திற்கு அஞ்சலி

தமிழறிஞா் கா.சு. பிள்ளையின் 80 ஆவது நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு. பிள்ளைய... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தேவா்குளம் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், மூவ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இருவா் கைது

துப்பாக்குடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில்அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி, வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன்மாரிமுத்து (30). தனியாா் நிறு... மேலும் பார்க்க

பேருந்து-பைக் மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனா... மேலும் பார்க்க

பிரம்மதேசத்தில் 30 பேருக்கு கனவு இல்லம் பணி ஆணை

பிரம்மதேசம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பிரம்மதேசம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத்திற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகள... மேலும் பார்க்க