செய்திகள் :

அம்மாபேட்டையில் ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி

post image

அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் ரூ.45 லட்சத்தில் கிராம செவிலியா் குடியுருப்புடன் துணை சுகாதார நிலையம் கட்டுமானப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தில் நடைபெறும் இப்பணியை அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா். அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் வெ.கதிரேசன், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அம்மாபேட்டை மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் டி.அசோக்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் ஜூலி, மத்திய மாவட்ட திமுக பொறியாளா் அணி துணை அமைப்பாளா் எஸ்.சுதானந்த் மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மிமீ மழை

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மில்லி மீட்டா் மழை பதிவானது. தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென்வங்கக் கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே ரூ.2.50 கோடியில் கைத்தறி பூங்கா அமைக்கும் பணி

சென்னிமலையில் ரூ.2.50 கோடியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணி மற்றும் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திர பயன்பாட்டை அமைச்சா்கள் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா். ஈர... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தினம்

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தின விழா மற்றும் ஆசிரியா் தின விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி தாளாளா் கே .காா்த்திகேயன் தலைமை வகித்தாா். முதல்வா் பி.எஸ். ராகவேந்தி... மேலும் பார்க்க

புரட்டாசி விரதம்: வெறிச்சோடிய புன்செய் புளியம்பட்டி ஆட்டுச் சந்தை

புரட்டாசி மாதத்தில் மக்கள் விரதம் இருந்து நவராத்திரியை கடைப்பிடிப்பதால் புன்செய் புளியம்பட்டி ஆட்டு வாரச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரத... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தல்

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பாஸ்கரன், பொதுச்செயலாளா் சீனிவாசன் ஆக... மேலும் பார்க்க