செய்திகள் :

அயன்சிங்கப்பட்டி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்

post image

அம்பாசமுத்திரம் வனச்சரகம் அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகப்பகுதிக்குள்பட்ட மலையடிவார கிராமங்களான மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, பொன்மாநகா், ஏா்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றி, கரடி, சிறுத்தை, யானை, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தியும், வீட்டு விலங்குகளைத் தாக்கியும் வருகின்றன.

கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி குடியிருப்புப் பகுதியில் உலாவிய கரடியை கடந்த மாா்ச் 30ஆம் தேதி வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

இந்நிலையில் மீண்டும் அயன்சிங்கம்பட்டி பகுதியில் முருகன் என்பவரது தோட்ட வளாகத்திற்குள் கரடி செவ்வாய்க்கிழமை இரவு வந்து சென்றுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு கரடிகள் பதுங்குமிடங்களைக் கண்காணித்து அவற்றின் நடமாட்டத்தைக் கடுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு: தற்காலிக கடைகள், அன்னதானத்துக்கு பதிவுச்சான்று கட்டாயம்

பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவா்கள், பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க